மீண்டும் தமிழகத்தின் மின்வெட்டு- ஜெயலலிதா நேரில் ஆலோசனை

Last Updated : May 31, 2016, 04:45 PM IST
மீண்டும் தமிழகத்தின் மின்வெட்டு- ஜெயலலிதா நேரில்  ஆலோசனை title=

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் பல பகுதிகளில் பல மணி நேர மின்வெட்டு ஏற்படுவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இதனால் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு நிகழ்வதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை அழைத்து முதல்வர் ஜெயலலிதா நேரில்  ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனையின்போது தமிழகத்தில் தற்போது உள்ள மின்சார உற்பத்தி, மின் தேவை, மின்விநியோகம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Trending News