மனைவி மீது சந்தேகம்! குழந்தை முன்பு கொடூரமாக கொலை செய்த போதகர்!

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கழுத்தை நெரித்து 11 மாத பெண் குழந்தை கண் முன்னே கொடூரமாக கொலை செய்த கிறிஸ்தவ துணை போதகர். மனைவி தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்ப்பதுபோல் நாடகம் ஆடியது அம்பலம்.  

Written by - RK Spark | Last Updated : Apr 30, 2024, 12:02 PM IST
  • மனைவியை கொலை செய்த துணை போதகர்.
  • குழந்தை கண் முன்னே கொடூர கொலை செய்துள்ளார்.
  • தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளார்.
மனைவி மீது சந்தேகம்! குழந்தை முன்பு கொடூரமாக கொலை செய்த போதகர்! title=

செங்கல்பட்டு மாவட்டம், பொன்மார் ஊராட்சியில் மலைதெருவில் 35 வயதான விமல்ராஜ், அவரது மனைவி 33 வயதான வைஷாலி, இவர்களுடைய பெண் குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.  விமல்ராஜ் பொன்மார், மலைத்தெருவில் உள்ள அடவெண்ட் கிறிஸ்தவ திருச்சசபையில் துணை போதகராக ஊழியம் செய்து வந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கிறிஸ்தவ பாதிரியார் மைக்கேல் என்பாரின் மூலம் மும்பையில் உள்ள வைஷாலி குடும்பத்தாருடன் அறிமுக ஆகி அதே வருடத்தில் விமலராஜ் - வைஷாலி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆகி நான்கு வருடம் ஆன் நிலையில் இருவருக்கும் 11 மாதத்தில் சாரா என்ற பெண் குழந்தை உள்ளது. 

மேலும் படிக்க | ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவுக்கு இ-பாஸ் கட்டாயம்!

கடந்த 28.04.2024. அன்று மாலை சுமார் 4 மணியளவில் மனைவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட உயிருக்கு போராடுவதாக கூறி கிறிஸ்தவ துணை போதகர் விமல்ராஜ் நண்பர் உதவியுடன் அவரது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்க முயற்சி செய்துள்ளார். சிகிச்சைக்காக அழைத்து சென்ற இடத்தில் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே வைஷாலி இறந்துவிட்டதாக கூறியதை தொடர்ந்து மனைவி உடலை விமல்ராஜ் தந்தையின் சொந்த ஊரான அருகில் உள்ள ஓட்டியம்பாக்கம் பகுதியில் இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்ய இருந்த நிலையில் மும்பையில் இருந்து இறந்த வைஷாலியின் குடும்பத்தார் வரும் வரை உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருக்க முடிவு செய்திருந்தனர். 

நேற்று ( 29.04.2024 ) மாலை மும்பையில் இருந்து வந்த வைஷாலியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரர் வைஷால்குமார் (35) ஆகியோர் வைஷாலி உடலை பார்த்தபோது முகத்தில் காயம் இருப்பதாக கூறி மரணத்தில் சந்தேகம் உள்ளது, வைஷாலி இறந்ததாக கூறும் அன்று நண்பகல் 2 மணியளவில் என்னிடம் நன்றாக பேசினார் என கூறி உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வைஷாலியின் அண்ணன் வைஷால்குமார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தாழம்பூர் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து உடலை மீது உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் இறந்த வைஷாலி கணவர் கிறிஸ்தவ துணை போதகர் விமல்ராஜை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மனைவி வைஷாலி மீது சந்தேகப்பட்டு கணவன் விமல்ராஜ்க்கு அடிக்கடி வைஷாலியிடம் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. வழக்கம்போல் ஏற்படும் சண்டைப் போல் இருவருக்கும் கடந்த 28.04.2024 அன்று மாலை சுமார் 4 மணியளவில் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையில் ஆத்திரமடைந்த கிறிஸ்தவ துணை போதகர் விமல்ராஜ் மனைவி வைஷாலி யின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மனைவியை கொலை செய்த கிறிஸ்தவ துணை போதகர் விமல்ராஜ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், அது அவரது மனைவிக்கு தெரியவர கணவரிடம் கேட்டபோது கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டைகள் வந்ததாகவும், ஒரு கட்டத்தில் தன் மீதுள்ள தவறை மறைக்க மனைவி மீது சந்தேகத்தை எழுப்பி சண்டையிட்டு வந்ததாகவும் இறந்த பெண் வீட்டார் குற்றம்சாட்டினர். திருமணம் ஆன நாளே வருடத்தில் வேறு ஒரு பெண்ணுடன் கிறிஸ்தவ துணை போதகர் தொடர்பில் இருந்ததை தட்டிக் கேட்ட மனைவியை கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக நாடகமாடிய கிறிஸ்தவ துணை போதகருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வைஷாலி குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாதா? தெளிவான தகவல் இல்லை என்று புகார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News