மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 8,400 கனஅடியாக அதிகரித்துள்ளது!

Last Updated : Jul 29, 2019, 09:22 AM IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரிப்பு! title=

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 8,400 கனஅடியாக அதிகரித்துள்ளது!

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 8,200 கன அடியில் இருந்து 8,400 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.33 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 14.99 டி.எம்.சி. ஆக உள்ளது.

அதேவேளையில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

Trending News