மேட்டுப்பாளையத்தில் கொடூர விபத்து... 4 வயது சிறுவன் பலி - 20க்கும் மேற்பட்டோர் காயம்!

Metupalayam Kothagiri Road Mini Bus Accident: மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 3, 2024, 11:05 PM IST
  • 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
  • மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • அவர்கள் சென்ற பேருந்து 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
மேட்டுப்பாளையத்தில் கொடூர விபத்து... 4 வயது சிறுவன் பலி - 20க்கும் மேற்பட்டோர் காயம்! title=

Metupalayam Kothagiri Road Mini Bus Accident: சென்னை அருகே கொளத்தூர் சூரப்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் நண்பர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்வதற்காக கடந்த ஏப். 30ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு மறுநாள் காலை மேட்டுப்பாளையம் சென்றுள்ளனர். 

அதன் பின்னர், அந்த 20க்கும் மேற்பட்டோர் ஊட்டி செல்வதற்காக ஆன்லைனில் மினி பேருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அதனை தொடர்ந்து மினி பேருந்து ஊட்டிக்கு சென்றனர். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்துவிட்டு இன்று மாலை 5 மணிக்கு ஊட்டியில் இருந்து மினி பேருந்தில் புறப்பட்டு கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

மேலும் படிக்க | நாமக்கல் : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாத்தா கொலை - பேரன் கைது! பரபரப்பு பின்னணி

பேருந்து கவிழ்ந்து விபத்து

இரவு சுமார் 7 மணிக்கு கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பவானிசாகர் அணை காட்சி முனை அருகே மினி பேருந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென மினி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி மினி பேருந்தில் வந்தவர்கள் கூக்குரல் இட்டனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். இந்த விபத்தில் சிக்கிய நான்கு வயது சிறுவன் சர்வேஷ் என்பவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் உடல் பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்தால் அது சிறுமியா, சிறுவனா என்ற குழப்பம் நீடித்தது. தற்போது உயிரிழந்தது 4 வயது சிறுவன் சர்வேஷ் என்பது உறுதியாகி உள்ளது.

மேல் சிகிச்சை

இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் ஏகே செல்வராஜ் எம்எல்ஏ மருத்துவமனைக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க பணியில் இருந்த மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். இதில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை இந்கத விபத்தில் சிக்கிய 7 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | 7 மாத கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News