இந்தியாவில் செஸ் விளையாட்டின் தலைமையகம் சென்னை - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

Minister Meyyanathan : இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு 187 நாடுகள் பங்குபெறும் செஸ் போட்டியை தமிழக முதல்வர் சென்னையில் நடத்த உள்ளார்  என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 28, 2022, 10:32 AM IST
  • 44வது செஸ் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகள் தீவிரம்
  • ‘இந்தியாவின் செஸ் போட்டியின் தலைமையகம் சென்னை’
  • விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி
இந்தியாவில் செஸ் விளையாட்டின் தலைமையகம் சென்னை - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்  title=

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச FIDE சதுரங்க போட்டியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார். 5 நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 350க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். 

மேலும் படிக்க | நீங்களும் ஜெயிக்கனுமா ? - பிரக்ஞானந்தா சொன்ன வின்னிங்க் ட்ரிக்ஸ் !

இந்நிகழ்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் நரேஷ் ஷர்மா, கல்லூரி முதல்வர் மற்றும் சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது, 

‘வரலாற்று சிறப்பு வாய்ந்த 44வது செஸ் ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 28 -ம் தேதி உலக புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் தொடங்க இருக்கிறது. அந்த மாபெரும் சிறப்பு நிகழ்வு நடப்பதற்கு முன்பாக சென்னையில் இருக்கக் கூடிய தனியார் கல்லூரியில் சர்வதேச செஸ் போட்டியை துவக்கி வைத்திருக்கிறேன். இந்தியாவிலுள்ள குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் போட்டி போட்ட நிலையில் தமிழக முதல்வரின் முயற்சியால் 24 மணி நேரத்தில் செஸ் ஒலிம்பிக் போட்டி தமிழகத்தில் நடைபெற அனுமதி பெற்றார். 

இந்திய வரலாற்றில் இது வரைக்கும் 187 நாடுகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்ததாக வரலாறு இல்லை. அப்படிப்பட்ட ஒரு சரித்திர நிகழ்வை தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு பெற்றுத்தந்து அந்த செஸ் போட்டியை தலைமையேற்று நேரடியாக கண்காணித்து, செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

கடந்த 19ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்த ஒலிம்பிக் தீபத்தை இந்தியாவில் இருக்கக் கூடிய அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை கடந்து வருகின்ற ஜூலை 28ம் தேதி தமிழக முதல்வரின் கரங்களில் ஒப்படைக்க இருக்கிறது. இந்தியாவில் 74 கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். அதில் அதிகமானவர்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்கள். குறிப்பாக, சென்னையில் தான் உள்ளார்கள். இந்தியாவில் செஸ் விளையாட்டின் தலைமையமாக சென்னை உள்ளது. 

மேலும் படிக்க | மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை திட்டம் ஜூலை 15-ம் தேதி தொடக்கம் - அமைச்சர் பொன்முடி

இந்த போட்டி இங்கு நடைபெறுவது நமக்கு மகிச்சியை தருகிறது. அதற்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் 187 நாடுகளைச் சேர்ந்த 227 அணிகள் பங்கேற்க இருக்கிறது. 135 நாடுகளுக்கும் மேலாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய விசாக்கள் வழங்கும் நடவடிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளில் இருந்து வருகை தர இருக்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு விசா வழங்க வேண்டிய நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம். 

மேலும், கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 24 மற்றும் 25 ம் தேதி குஜராத்தில் உள்ள நிவடியா என்ற பகுதியில் இந்தியாவின் அனைத்து மாநிலத்தைச் சார்ந்த விளையாட்டுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. அதில் விளையாட்டு போட்டிகள் அடுத்த கட்டமாக கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்து எடுத்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வரின் நோக்கமும் அதுவாகத்தான் இருக்கிறது. 

விளையாட்டு போட்டிகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கொண்டு சென்றால் தான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் போது மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அமெரிக்காவில் இருக்கக்கூடிய ஒரு பல்கலைகழகம் ஒலிம்பிக் போட்டிகளில் 120 தங்க பதக்கங்களை வென்று இருக்கிறது என்பது வரலாறு. அதன் அடிப்படையில் கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் கொண்டு செல்வது தான் தமிழக முதல்வரின் அடுத்த இலக்கு.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னால் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஓவ்வொரு பள்ளிகளிலும் விளையாட்டு (PET) வகுப்புகள் இருந்தது. ஆனால் தற்போது இல்லை. மீண்டும் அதைக் கொண்டு வந்து நடைமுறை படுத்துவதற்க்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொண்டு இருக்கிறார்’ என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | தொடங்கியது ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் - இலக்கு என்ன ?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News