என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை - ஓ.பன்னீர் செல்வம் அதிரடி!

எடப்பாடி பழனிசாமி மற்றும் கேபி முனுசாமியை நான் கட்சியில் இருந்து நீக்குகிறேன் என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Jul 11, 2022, 12:15 PM IST
என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை - ஓ.பன்னீர் செல்வம் அதிரடி! title=

ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்ட நிலையில், நான் எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்குகிறேன் என்று ஓபிஎஸ் பேசி உள்ளார்.  இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றினர்.  கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டது.  

மேலும் படிக்க |  அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கம்

இந்நிலையில் தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம், என்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை, நான் எடப்பாடி பழனிசாமி மற்றும் கே பி முனுசாமியை கட்சியில் இருந்து நீக்குகிறேன் என்று கூறியுள்ளார்.  எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்து மாற்றி மாற்றி வெளியேற்றுவதாக கூறியுள்ளது அனைவரையும் குழப்பதில் ஆழ்த்தியுள்ளது.  

மேலும் படிக்க | தொடரும் வருமான வரி துறை சோதனை! மீண்டும் சிக்கிய எஸ்பி வேலுமணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News