இந்தியாவில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் -பியூஷ் கோயல்!

இந்தியாவில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 16, 2019, 07:27 PM IST
இந்தியாவில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் -பியூஷ் கோயல்! title=

இந்தியாவில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறிய பியூஷ் கோயல்,

பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் பாஜக கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பேட்டியளித்துள்ளார்.

எதிர்வரும் மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியியை வீழ்த்த அதிமுக - பாஜக கூட்டசியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க காங்கிரஸ் - பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கூட்டணி, தொகுதி பங்கீடு என தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று செய்தியாளர்களிடம் "இந்தியாவில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழகம் - புதவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மக்கள் நலத் திட்டங்களை தொடர வேண்டும். மத்திய-மாநில அரசுகள் சாமானிய மக்கள், பின்தங்கியோருக்கு அனைத்து வகையான திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில் பணியாற்றும் என தெரிவித்துள்ளார்.

Trending News