கடலில் பலத்தகாற்று: 4-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்!!

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி மீனவர்கள் 4 ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை!!

Last Updated : Jun 23, 2018, 09:51 AM IST
கடலில் பலத்தகாற்று: 4-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்!! title=

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி மீனவர்கள் 4 ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பகலில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அந்த வேப்பசலனம் காரணமாக சென்னையின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், தென்கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதை தொடர்ந்து, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி மீனவர்கள் 4 ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. கடலில் பலத்தகாற்று வீசும் என்று வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.  

இதனால், சுமார் 1800 விசைப்படகுகளும், 3000-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கரையில் நிறுத்தம் நிறுத்தப்பட்டுள்ளது!

 

Trending News