முடிந்தது வேட்புமனு தாக்கல்! ஆர்.கே.நகர் ரேசில் யார் யார்?

இன்றுவரை தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் நாளை (டிச.,5) பரிசீலிக்கப்படும்.

Last Updated : Dec 4, 2017, 03:59 PM IST
முடிந்தது வேட்புமனு தாக்கல்! ஆர்.கே.நகர் ரேசில் யார் யார்? title=

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. 

மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று 110 பேர் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்ய காத்திருந்தனர்.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏற்கனவே அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகனேஷ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் மனுதாக்கலில் கடைசி நாளான இன்று ஏராளமானோர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த பட்டியலில் நடிகர் விஷாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெ., அண்ணன் மகள் தீபாவும் இடம்பெற்றார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றுவரை தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் நாளை (டிச.,5) பரிசீலிக்கப்படும்.

தாக்கல் செய்த மனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் கமிஷனால் வெளியிடப்படும்!

Trending News