ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சென்னை மாதவரம் அருகே என்கவுண்டர் செய்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Jul 14, 2024, 08:17 AM IST
  • சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்.
  • 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • ஒருவர் தற்போது என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! title=

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை காவல் துறையினர் என்கவுண்டர் செய்தனர். சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுமார் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில் அவர் பல்வேறு உண்மைகளை காவல்துறையிடம் தெரிவித்ததின் பெயரில் அதன் புலன் விசாரணைக்காக தடயங்களை சேகரிப்பதற்காக அவரை மாதவரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

மேலும் படிக்க | கிசுகிசு : தூதுவிடும் தோழி, பழைய பாசத்தால் கரையும் மாஜிக்கள்..!

இந்த நிலையில் அவர் போலீஸ்காவிலிருந்து தப்பிவிடும் முயன்றதாக தெரிய வருகிறது. இதனை அடுத்து போலீசார் அவரை சரணடையுமாறு பலமுறை எச்சரிக்கை செய்தனர். ஆனால் அவர் சரணடைய மறுத்து வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் தற்காப்புக்காக அவரை மூன்று ரவுண்டுகள் சுட்டதாக கூறப்படுகிறது. இதனை எடுத்து சம்பவ இடத்திலேயே ரவுடி திருவேங்கடம் பிணமானார்.

murder

இதனை தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அவரது உடலானது பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டாண்டில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இந்த என்கவுண்டர் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளி என அருள் என்பவரின் உயிர் நண்பர் ஆவார். இவர்தான் இந்த கொலை காண திட்டங்கள் தீட்டியது மற்றும் கொலை திட்டம் வகுத்து வேவு பார்த்தது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் பிரபல ரவுடி போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | புதுக்கோட்டை : என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி குடும்பத்தின் பகீர் புகார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News