ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள்

Rowdy Murder: தன்வினை தன்னைச் சுடும் என்பதை நிரூபிக்கும் கொலை... ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 10, 2022, 12:05 PM IST
  • சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை
  • ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள்
  • திருவேற்காடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் முன்னாள் குற்றவாளி
ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள் title=

சென்னை: சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 28, இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த வருடம் சண்முகம் என்பவரை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியாக சிறைக்கு சென்று கடந்த மாதம் தான் வெளியில் வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று நெற்குன்றம் வெங்காயமண்டி மந்தவெளி சாலையில் ரவுடி ராஜ்குமாரை மர்ம கும்பல் துரத்தி வந்து கொலை செய்துள்ளனர்.

இரவு 10 மணியளவில் ஆள்நடமாட்டம் உள்ள சாலையில், திடீரென ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி வருவதை அருகில் இருந்தவர்கள் பதற்றத்துடன் பார்த்துள்ளனர். அச்சத்தில் ஓடிவந்த ரவுடி ராஜ்குமார்,  அங்கிருந்த சோடா கடை ஒன்றில் பதுங்கியுள்ளார். இதனை பார்த்த கும்பல், ரவுடி ராஜ்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி உள்ளது. 

தன்வினை தன்னைச் சுடும் என்பதை நிரூபிக்கும் கொலை... ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்று தெரியவில்லை. சரமாரியாக வெட்டுப் பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க | புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் எம்எம்ஏக்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த ராஜ்குமாரின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலைக்கு கொலை தான் முடிவு என்று ரவுடியை கொலை செய்த சம்பவம் நெற்குன்றம் பகுதியில் பதட்டத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவேற்காடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் கண்ணன் ஆகியோர்களை போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க | தென்மேற்கு பருவமழை புதுச்சேரியில் 94 சதவீதம் அதிகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News