ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

Last Updated : Jan 2, 2020, 08:16 AM IST
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது title=

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

9 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள காஞ்சீபுரம், வேலூர், வில்லுபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குரிச்சி மற்றும் தென்காசி போன்ற ஒன்பது மாவட்டங்களிலும் நான்கு மாதங்களுக்குள் மறுவரையறைப் பணிகளை நிறைவுசெய்து, பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 என இரு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 29 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளதால், முழு தேர்தல் முடிவு வெளியாக மேலும் ஒரு நாள் ஆகலாம் என்பதால், ஜனவரி 3 ஆம் தேதியும் பள்ளிகளுக்கு தமிழக அரசு (TN Govt) சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்ட தேர்தலின்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, அரியலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 30 வார்டுகளுக்கு, நேற்று முன்தினம் நடந்த தேர்தலோடு, மறுவாக்குப்பதிவு நடந்தது. இதில் 72.70 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

அனைத்து வாக்குப்பெட்டிகளும் தமிழகத்தில் உள்ள 315 வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறை இன்று 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு அறை திறக்கப்பட்டது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் நடக்கும் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட யாரும் பார்க்க முடியாது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது. தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் எண்ணப்படுகின்றன.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News