தாழ்வான மின் கம்பியால் கை கால்களை இழக்கும் அவலம்! அரசு நடவடிக்கை எடுக்குமா?

பரமக்குடி அருகே நடந்த துயர சம்பவம். மின்வாரியம் அலட்சியத்தால் இங்கு வசிக்கும் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2022, 03:23 PM IST
தாழ்வான மின் கம்பியால் கை கால்களை இழக்கும் அவலம்! அரசு நடவடிக்கை எடுக்குமா? title=

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது சரஸ்வதி நகர் கிராமம். இங்கே சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் வசித்து வருபவர்கள் தான் கமலி ஸ்ரீ மற்றும் சுந்தரபாண்டியன்.

சுந்தரபாண்டியன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது சிறுவயதில் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கீழே கிடந்த கம்பியை எடுத்து மேலே தூக்கி விளையாடும்போது ஊரின் நடுவே தாழ்வாக சென்ற மின் கம்பியில் உரசி தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த சுந்தரபாண்டியன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது இரண்டு கைகளையும் இழக்கும் நிலை ஏற்பட்டது. 

ஆனாலும் மனம் தளராமல் இரண்டு கைகள் இழந்த நிலையிலும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று தனது படிப்பை முடித்து விட்டு, சாதனை செய்வதற்கு ஊனம் ஒரு தடையில்லை என்று நிரூபிக்கும் வகையில் நீச்சல் போட்டியில் பங்கேற்று பல வெற்றிகளைக் கண்டு அசத்தி வந்துள்ளார். தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அரசின் உதவியோடு வேலை வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார் சுந்தரபாண்டியன். 

இந்த நிலைமை அடங்குவதற்குள் இதே ஊரில் வசித்து வரும் கமலிஸ்ரீ கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தான் துவைத்த துணிகளை காய வைப்பதற்கு தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துணியை காய வைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த கமலிஸ்ரீயை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த சிகிச்சை பலனில்லாமல் அவரது வலது கையை இழக்க நேரிட்டது. இதனால் பெரும் துயரம் அடைந்த கமலிஸ்ரீ தற்பொழுது கடும் மன வேதனையில் உள்ளார். 

ALSO READ | லேட்டா வந்த சன்னா மசாலாவும்... தாபாவை அடித்து நொறுக்கிய 6 பேரும்

எந்த வேலையானாலும் சுறுசுறுப்பாக செய்யும் கமலிஸ்ரீ தற்பொழுது எந்த வேலையும் செய்ய முடியாமல் அடுத்தவரின் உதவியோடு வாழ்ந்து வருகிறார். இதற்கெல்லாம் காரணம் தங்களது ஊரின் நடுவே வீட்டின் மேற்கூரையை ஒட்டி தாழ்வாக செல்லும் அந்த உயர் அழுத்த மின் கம்பிகள் தான் என்று குற்றம் சாட்டுகின்றனர். 

அந்த கிராம மக்கள் பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் மின்வாரியம் அலட்சியத்தால் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இங்கு வாழும் நாங்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் கவலையுடன் தெரிவித்தனர். இந்த ஊரிலுள்ள சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை மழை மற்றும் இடி மின்னல் அடித்தால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் அவல நிலையும் உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.  

இதுபோல பத்துக்கும் மேற்பட்டோர் இந்த தாழ்வான மின் கம்பிகளால் பாதிக்கப்பட்டு சிறு சிறு காயங்களுடன் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு நிதி உதவியும் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என்பது தான் வேதனையான விஷயம்.

தற்போது தனது கைகளை இழந்து தவிக்கும் சுந்தரபாண்டியன் மற்றும் கமலிஸ்ரீ போல் இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்றும் அதற்கு காரணமான உள்ள இந்த தாழ்வான மின் கம்பிகளை ஊரின் ஒதுக்குப்புறமாக கொண்டுசெல்ல மின்வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ | தருமபுரி: 15 வயது சிறுமியை திருமணம் செய்த தாய்மாமன் உள்ளிட்ட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News