பணத்திற்காக பாட்டியை கொன்ற பேரன்கள்: பீதியை கிளப்பும் Crime News

நகை, பணத்திற்காக சொந்த பேரன்கள் ஒரு மூதாட்டியை கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 12, 2021, 08:01 AM IST
பணத்திற்காக பாட்டியை கொன்ற பேரன்கள்: பீதியை கிளப்பும் Crime News title=

சங்கராபுரம் அருகே ஒரு மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நகை, பணத்திற்காக சொந்த பேரன்கள் அந்த மூதாட்டியை கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்  மூங்கில்துறைப்பட்டு அடுத்துள்ள வடமாமந்தூர் தக்கா பகுதியில் வசித்து வந்தவர் அலிமாபீ. அவருக்கு வயது 75. இவர் டிசம்பர் 10 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை (Murder) குறித்து தகவல் அறிந்த  மூங்கில்துறைப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில்  காவல்துறையின் சந்தேகத்தின் அடிப்படையில் மூதாட்டியின் மகள் வயிற்றுப் பேரன்  சல்மான்  என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையின் போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. சல்மானும் அவருக்கு உதவியதாக மூதாட்டியின் முதல் மகனுடைய மருமகன்  சௌகத் அலி ஆகிய இருவரும் மூதாட்டியிடம் உள்ள நகை பணத்திற்காக மூதாட்டியை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கொலை செய்யப்பட்ட மூதாட்டிக்கு இருவரும் பேரன்கள் ஆவார்கள். இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் (TN Police) அவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள், 45 கிராம் உருக்கிய தங்கம், 31,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் அவர்களை சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சங்கராபுரம் அருகே நகை பணத்திற்காக சொந்த பேரன்களே மூதாட்டியை கல்லால் அடித்து கொலை செய்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணத்தாசை என்பது, உறவு, பிணைப்பு, பாசம், சொந்த பந்தம் ஆனைத்தையும் தவிடுபொடியாக்கி மனிதனை மிருகமாக்கி விடுகிறது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சாட்சியாக அமைகிறது. 

ALSO READ | கெமிக்கல் நிறுவனத்தில் குளோரின் வாயு கசிவு - ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி 

ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News