அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக காவலர் மீது பெண் புகார்

கணவன் மனைவி இருவரிடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்த நிலையில், மேனகா கடந்த சில தினங்களாக தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 6, 2022, 08:12 AM IST
  • கணவன் மனைவி பிரச்சனை
  • காவலர் மீது பெண் புகார்
அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக காவலர் மீது பெண் புகார் title=

கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மேனகா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவி இருவரிடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்த நிலையில், மேனகா கடந்த சில தினங்களாக தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். 

அத்துடன் மதன்குமார் குடித்துவிட்டு தன்னை துன்புறுத்துவதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி எழுத்து பூர்வமாப புகாரும் அளித்துள்ளார். 

மேலும் படிக்க | தங்கையின் காதலனுக்கு கத்திக்குத்து - அண்ணன் கைது..!

இந்நிலையில் நேற்று மேனகாவுக்கு கோவில்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து தொலைபேசி மூலம் பேசிய மூர்த்தி என்ற காவலர், மதன்குமார் சாணிபவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்று இருப்பதாகவும், அவர் உயிரிழந்தால் யார் பொறுப்பு என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். மேலும் மேனகா மற்றும் அவரது சித்தி ஆகியோரிடமும் மிரட்டும் தோரணையில் பேசிய காவலர் மூர்த்தி மருத்துவமனைக்கு சென்று கணவரை பார்க்கும் படி தெரிவித்துள்ளார். 

கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது அப்படி ஒரு நபர் அனுமதிக்கபடவே இல்லை என்பது தெரியவந்துள்ளது. மீண்டும் இன்று காலை மேனகாவிற்கு காவலர் மூர்த்தி போன் செய்த போது , தனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத பொழுது எதற்காக பொய் சொன்னீர்கள் என காவலரிடம் கேட்டுள்ளார். தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறிய மேனகா, இது குறித்து தனது வழக்கறிஞர் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் மனுவும் அனுப்பியுள்ளார். 

இந்த நிலையில் புகார் மனுவில் கோவில்பாளையம் காவல் நிலைய காவல் மூர்த்தி, தன்னையும் தனது உறவினரையும் அருவருக்கத்தக்க வகையில் பேசியதுடன், தவறான தகவல்களை கூறி தன்னையும் தனது உறவினர்களையும் மிரட்டி வரும் காவலர் மூர்த்தி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேனகா தெரிவித்துள்ளார். மேலும் காவலர் மூர்த்தி தன்னிடம் பேசிய ஆடியோ பதிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவுகளில் மேனகாவை மிரட்டும் விதத்தில் காவலர் மூர்த்தி பேசுவது பதிவாகியுள்ளது. இன்னொரு ஆடியோவில் தனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத பொழுது எதற்காக பொய் சொன்னீர்கள் என மேனகா காவலரிடம் பேசுவதும் பதிவாகி இருக்கிறது. இந்த ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | முன்னாள் காதலியை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபருக்கு செக் வைத்த போலீஸ்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News