கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2021, 09:09 AM IST
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு title=

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் (Oxygen Cylinders) , ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்து பொருட்கள் வாங்க ரூ.41.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,  கொரோனா (Corona Virus) தடுப்பு முயற்சிகளுக்கு உதவும் வகையில், நிதி வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, இன்று வரை 186.15 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில், ரெம்டெசிவிர் (Remdesivir) போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில்  மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

இதனையடுத்து,  தமிழ்நாட்டில் (Tamil Nadu) கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக  கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை இரண்டாவது கட்டமாக வழங்கிட முதல்-அமைச்சர் ஆணையிட்டிருந்தார். தற்போது சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள்  மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினை முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28-5-2021) ஆணையிட்டுள்ளார். 

ALSO READ: தமிழகத்தில் மேலும் 1 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 31,079 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் மொத்த எண்ணிக்கை 20,09,700 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 486 பேர் இறந்தனர். இது, இதுவரையிலான அதிகபட்ச ஒரு நாள் இறப்பு எண்ணிக்கையாகும். இதனுடன் தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் உறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,775 ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ: 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்: முதல்வர் ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link -  https://bit.ly/3hDyh4G

Apple Link -  https://apple.co/3loQYeR

 

Trending News