COVID-19 Update: தமிழகத்தில் 4,013 பேர் பாதிப்பு, 115 பேர் உயிர் இழப்பு

சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் 4,013 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,92,420 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 227 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 3, 2021, 07:45 PM IST
  • தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4,013 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
  • இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 115 பேர் தமிழகத்தில் இறந்தனர்.
  • இன்று 5,537 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர்.
COVID-19 Update: தமிழகத்தில் 4,013 பேர் பாதிப்பு, 115 பேர் உயிர் இழப்பு  title=

சென்னை: இந்தியாவையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. இரண்டாவது அலையின் சீற்றம் மே மாதம் உச்சத்தில் இருந்தது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு,  ஊரடங்கு மற்றும் பல வித  தொற்று பரவல் நடவடிக்கைகள் காரணமாக மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் 4,013 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,92,420 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 227 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 115 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,933 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 35,881 ஆக உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 93 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,933 -ஐ எட்டியுள்ளது. 

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 4,724 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,23,606 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மொத்தமாக 1,60,194 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 4,013 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பாட்டுள்ளது.  இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,319 ஆண்களும் 1,694 பெண்களும் அடங்குவர்.

ALSO READ: COVID 2-வது அலை முடிந்ததாக நினைக்கவேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இது தவிர தவிர அரியலூரில் 51 பேரும், செங்கல்பட்டில் 188, சென்னையில் 227, கோவையில் 474, கடலூரில் 98, தர்மபுரியில் 92, திண்டுக்கல்லில் 31, ஈரொட்டில் 360, கள்ளக்குறிச்சியில் 91, காஞ்சிபுரத்தில் 62, கன்னியாகுமரியில் 69, கரூரில் 44, கிருஷ்ணகிரியில் 89, மதுரையில் 78, மயிலாடுதுரையில் 37, நாகப்பட்டினத்தில் 42, நாமக்கல்லில் 118, நீலகிரியில் 77, பெரம்பலூரில் 24, புதுக்கோட்டையில் 66, ராமநாதபுரத்தில் 25, ராணிப்பேட்டையில் 50, சேலத்தில் 251, சிவகங்கையில் 57, தென்காசியில் 29,  தஞ்சாவுரில் 232, தேனியில் 49, திருப்பத்தூரில் 27, திருவள்ளூரில் 102, திருவண்ணாமலையில் 161, திருவாரூரில் 55, தூத்துக்குடியில் 51, திருநெல்வேலியில் 32, திருப்பூரில் 231, திருச்சியில் 170, வேலூரில் 45, விழுப்புரத்தில் 69, விருதுநகரில் 58 பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கடந்த 43 நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி தற்போது 5,000-க்கும் கீழ் வந்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் ஊரடங்குக்கு பிறகு ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. தொற்று குறைந்து வரும் நிலையில், படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (J Radhakrishnan) செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் தொடர்ந்து தீவிரமாக பரிசோதனைகளும், கொரோனா நோயாளிகளை கண்டறியும் பணியும் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். 

இது குறித்து விரிவாக பேசிய ராதாகிருஷ்ணன், " ஊரடங்கில் இருந்து தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அனைவரும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனமின்றி இருக்கக்கூடாது. கொரோனா நோயாளிகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா  உயிரிழப்புகளை தமிழக அரசு மறைக்கவில்லை. மறைப்பதற்கான அவசியமும் இல்லை. டெல்டா பிளஸ் (Delta Plus Variant) மட்டுமின்றி அனைத்து வகையான தொற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்கப்படும்” என்று கூறினார். 

ALSO READ: கால தாமதம் வேண்டாம்! உடனடியாக புதிய ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும்: முதல்வர் உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News