தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்!

தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.

Last Updated : Apr 5, 2019, 08:55 AM IST
தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்! title=

தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி 8 மணி நேரங்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்பட வேண்டும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுக்கடைகள் அடைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதத்தில் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் மிகவும் சுதந்திரமான, நியாயமான, அமைதியான முறையில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடத்த வேண்டும் என்ற வகையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாட்களில் மது பானங்கள் விற்பனை செய்ய தடை விதித்தும், பார்களை மூடவும் அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Trending News