காதலித்ததால் கரு உண்டானது - பயத்தில் பூச்சி மருந்து குடித்த இளம் ஜோடி!

எல்லை மீறியதில் சிறுமி கர்ப்பமானதால் காதலர்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் !

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 12, 2022, 02:46 PM IST
  • சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி எல்லை மீறல்
  • மூன்று வருட காதல் - மோசம் செய்த காதலன்
  • இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை
காதலித்ததால் கரு உண்டானது - பயத்தில் பூச்சி மருந்து குடித்த இளம் ஜோடி! title=

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முகந்தனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அஜய். 20 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அடிக்கடி செல்போனில் நேரத்தை கழித்தவர்கள் நெருங்கி பழகியிருக்கிறார்கள். அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய இளைஞர் எல்லை மீறியிருக்கிறார். அதில் மூன்று மாதம் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனால் காதலர்கள் இருவரும் பயத்தில் உறைந்து போனார்கள். 

Suicide,lovers,girl,poison,pregnant,பூச்சி மருந்து குடித்து காதலர்கள் தற்கொலை

சம்பவத்தன்று பெற்றோருக்கும் ஊராருக்கும் தெரிந்து விடும் என பயத்தில் சிறுமி உயிரை விட முடிவெடுத்திருக்கிறார். யாருமில்லாத நேரம் பார்த்து வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதுவரை யாருக்கும் தெரியாது சிறுமி கர்ப்பமாக இருப்பது. 

காதலி பூச்சி மருந்து குடித்ததை அறிந்த இளைஞர் அஜய்யும் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்து குடித்து மயங்கி உள்ளார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க | CRIME : தகாத உறவுக்காக போலீசாரே கொலைகாரனான கொடூரம் ! - இப்படி ஒரு கொலையா ?

இச்சம்பவம் குறித்து 17 வயது சிறுமி நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அஜய் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் இளைஞன் அஜய் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க | மகளை கட்டிக்க மறுத்த தம்பி ; தம்பிக்கு பிறந்த குழந்தையை கொன்ற அரக்கிக்கள் !

 சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News