ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்ற கொடூரம்

காட்டிற்குள் விறகுவெட்ட சென்ற பெண், கழுத்தறுக்கப்பட்டு காயம்பட்ட சம்பவம், பெரும் அதிர்வை வைத்துள்ளது. கிராமத்து சைக்கோவின் வெறிச்செயலால் அரங்கேறிய பகீர் சம்பவம் இது....  

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 20, 2022, 07:13 PM IST
  • குடிப்போதையில் ஆட்டோ ஓட்டுநர் வெறிச்செயல்
  • உயிருக்கு போராடிய நிலையில் பெண் சிகிச்சை
  • பிடிபட்ட சைக்கோ கொலையாளியின் வாக்குமூலம்
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்ற கொடூரம் title=

திருவண்ணாமலை அடுத்துள்ள ஆணாய்பிறந்தான் கிராமம்... ஊருக்கு வடக்கே... புற்கள் முளைத்திருக்கும் ஏரிக்கரை ஓரம், பெண்ணின் பலத்த அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. 

அப்போது அவ்வழியாக சென்றவர்கள் எங்கிருந்து கேட்கிறது அந்த அலறல், என தேடியிருக்கிறார்கள். அந்த நேரம் காட்டுப்பகுதியில் இருந்து ஒருவர் தலைதெறிக்க ஓடியிருக்கிறார். உடனே சந்தேகமடைந்தவர்களில் இருவர் அவரை விரட்ட, இன்னொருவர் காட்டிற்குள் ஓடியிருக்கிறார். அப்போது காட்டிற்குள் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். அரண்டு போனவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

திருவண்ணாமலை, விறகுவெட்ட சென்ற பெண்,கழுத்தறுத்து கொலை,ஆணாய்பிறந்தான்,வழக்குப்பதிவு,அலறல் சத்தம்,பெண்

மறுபுறம் அங்கிருந்து தப்பியோடியவரை விடாது துரத்தி இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் மடக்கி பிடித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துசேர பிடிபட்ட நபரையும் சம்பவ இடத்திற்கு இழுத்துவந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிடிபட்ட நபரிடன்... யார்? எங்கிருந்து வந்தார் ? பெண்ணின் கழுத்தை அறுத்தது அவர்தானா ? என்றெல்லாம் விசாரிக்க தொடங்கினர்.

ஊர்க்காரர்களிடம் பிடிபட்டவர் பெயர் சிவம். திருவண்ணாமலை அடுத்துள்ள மணலூர்பேட்டை சேர்ந்தவர். இரண்டு திருமணம், மூன்று பிள்ளைகள் இருக்க ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று ஆணாய் பிறந்தான் கிராமம் வழியாக ஆட்டோ ஓட்டி சென்றவரின் கண்ணில் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் தென்பட்டிருக்கிறார்.

திருவண்ணாமலை, விறகுவெட்ட சென்ற பெண்,கழுத்தறுத்து கொலை,ஆணாய்பிறந்தான்,வழக்குப்பதிவு,அலறல் சத்தம்,பெண்

ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் விறகு வெட்டி, தூக்கி வந்த பெண்ணை பார்த்ததும், மதுபோதையில் இருந்த சிவமின் புத்தி, ஆக்ரோஷத்தில் புகுந்தது. காட்டிற்குள் நுழைந்தவர் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிவமின் கையில் சிக்காமல் அப்பெண் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். அப்போது அவரை அப்படியே, விட்டால் ஆபத்து என நினைத்த கொடூரன் பெண்ணின் கழுத்தை அறுத்து நிலை குலைய வைத்திருக்கிறார். 

மேலும் படிக்க | அதிமுக அலுவலகம்: இபிஎஸ் வெற்றி, ஓபிஎஸ் தோல்வி ஏன்? 61 பக்க தீர்ப்பின் சாராம்சம் என்ன

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பிடிபட்ட சிவம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குடி குடியை கெடுக்கும்; குடிப்பவனின் புத்தியையும் கெடுக்கும் என்பதற்கு இந்த கொடூர சம்பவம் ஓர் உதாரணம்..

மேலும் படிக்க | Teacher Crime: 72 மாணவர்களை தாக்கிய விழுப்புரம் ஆசிரியர் பணியிட நீக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News