TN Assembly: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று உரையாற்றுகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 21, 2021, 08:54 AM IST
  • தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
  • காலை 10 மணிக்கு கவர்னர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார்.
  • சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும்.
TN Assembly: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம் title=

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. சட்டப்பேரவை மாண்புகளின்படி, மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையை தொடங்கிவைத்து உரையாற்றுவார்.'

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தலைமையிலான கூட்டணி வெற்றிவாகை சூடியது. முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்றார். வழக்கமாக சட்டப்பேரவைக்கு (TN Assembly Session) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் முதல் கூட்டத்தில் கலந்துக் கொள்வார்கள். ஆனால் இந்த முறை நடைமுறைகளை சற்று மாற்றியமைத்துள்ளது கொரோனா பெருந்தொற்று.

ALSO READ | Lockdown Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடக்கம்

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக அரசு செய்துள்ளது. தற்போது நாளைய முதல் கூட்டத்திற்காக சட்டப்பேரவைக்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாதவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இது எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமல்ல, சட்டப்பேரவை அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும். மேலும், சட்டசபையில் இருக்கைகள், சமூக இடைவெளியுடன் போடப்பட்டுள்ளன. அதோடு கொரோனா பரவல் தடுப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சட்டசபையில் கடைப்பிடிக்கப்படும்.

இந்நிலையில், தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சட்டசபை மரபுப்படி சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள்.

காலை 10 மணிக்கு கவர்னர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். தொடர்ந்து, கவர்னர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அதோடு அவை நிகழ்ச்சிகள் முடிவடையும். பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அதில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

ALSO READ | TN Assembly: சட்டப்பேரவை நிகழ்வுகள் இனி நேரலையில் ஒளிபரப்பாகுமா? அரசு பரிசீலனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News