ஏப்ரல் 25ம் தேதி தமிழகத்தில் வேலை நிறுத்தும்!

Last Updated : Apr 16, 2017, 12:36 PM IST
ஏப்ரல் 25ம் தேதி தமிழகத்தில் வேலை நிறுத்தும்! title=

வருகின்ற 25-ம் தேதி விவசாயிகளின் நலன் கருதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்த திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், விவசாயிகளின் நலன் கருதி திமுக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் சிறு கட்சிகள் பலவும் கலந்து கொண்டன. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் முக்கிய தீர்மானமாக, தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஏப்ரல் மாதம் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்து. 

மேலும் ஏப்ரல் 22-ம் தேதி அனைத்துக்கட்சி பொதுக்கூட்டத்திற்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. இவை இல்லாமல் நீட் தேர்வு, குடிநீர் பிரச்னை, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Trending News