குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; பாதுகாப்பு கருதி குளிக்க தடை!

தென்காசி பகுதியில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 5, 2022, 12:36 PM IST
  • தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது.
  • இரவு வரை மழை நீடித்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
  • தென்காசி பகுதியில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; பாதுகாப்பு கருதி குளிக்க தடை! title=

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்க பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பரிதவித்தனர். 
இரவு வரை மழை நீடித்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இன்று காலையில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .

இதனால், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் பாதுகாப்பு கருவி சுற்றுலா பயணிகள் குறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மேலும் படிக்க | ஜீ தமிழ் நியூஸ் செய்தி எதிரொலி! காஞ்சிபுரத்தில் காவல்துறை பாதுகாப்பு பணி தீவிரம்

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் படிக்க | சென்னையில் மழைநீர் தேங்கவில்லை - அமைச்சர் சேகர்பாபு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News