அதிமுக தொண்டர்கள் இரண்டு பேர் உயிரிழப்பு!

Last Updated : Aug 20, 2017, 02:48 PM IST
அதிமுக தொண்டர்கள் இரண்டு பேர் உயிரிழப்பு! title=

தஞ்சை அருகே அம்மாபேட்டையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களை வைக்கும் போது, மின்சாரம் தாக்கி, அதிமுக தொண்டர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

திருவாரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தஞ்சை அம்மாபேட்டை பகுதியில், அதிமுக தொண்டர்கள் வரவேற்பு பேனர்களை வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, உயர் மின் அழுத்த கம்பியில் பேனர்கள் பட்டு, மின்சாரம் தாக்கியதில், மணியரசன், கர்ணன் ஆகிய இரண்டு அதிமுக தொண்டர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

சத்தியராஜ் என்பவர் படுகாயத்துடன் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது நிவாரண நிதியில் இருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Trending News