இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மர்மப் படுகொலை

இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 10, 2021, 09:31 PM IST
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் படுகொலை
  • நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தபோது அசம்பாவிதம்
  • நீடாமங்கலத்தில் போலீசார் குவிப்பு
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மர்மப் படுகொலை title=

திருவாரூர் மாவட்டம்  நீடாமங்கலம் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஒளிமதி கிராமத்தை சேர்ந்த தமிழார்வன் இவர் இன்று மாலை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். நீடாமங்கலம் பகுதியில் இக்கொலை காரணமாக பதட்டம் நிலவுவதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க நீடாமங்கலத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று மாலை நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த அவரை அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை கொலை செய்து விட்டு தப்பியோடியது. கொலைவெறி கும்பல் அவரது தலைப்பகுதியில் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்தார்.

தகவலறிந்து அங்கு கூடிய அவரது ஆதரவாளர்கள் கடைகள் மற்றும் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். 

Also Read | கொடுமை! வேலூரில் சிறுவனை கொலை செய்து பழி தீர்த்த இளைஞர்கள்

தொடர்ந்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையினரிடம் கொலையுண்ட தமிழார்வனின் உடலை ஒப்படைக்க மறுத்தும் வந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் அங்கு வந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் நிலைமை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தொடர்ந்து நீடாமங்கலம் பகுதியில் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாவண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொலையுண்ட தமிழார்வன் மீது அரசியல் வழக்குகள் மட்டுமில்லாமல் பல்வேறு அடிதடி வழக்குகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கொலை முன்விரோததால் நிகழ்த்தப்பட்டதா? அல்லது வேறு காரணங்களுக்காக நிகழ்த்தப்பட்டதா? மேலும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழார்வன் கொலை சம்பவம் காரணமாக நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதட்டம் நீடிக்கிறது.

READ ALSO | சுடுகாட்டை சூதாட்டக் களமாக மாறிய நபர்கள் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News