நீங்க நினைக்கிற மாதிரி யுபிஐ -ல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது! லிமிட் வந்துருச்சு

UPI மூலம் தினசரி பரிவர்த்தனைகளுக்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இனி நினைக்கிற நேரத்தில் எல்லாம் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியாது. அதற்கான புதிய வரம்பை தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 28, 2024, 10:50 AM IST
  • யுபிஐ பரிவர்த்தனைக்கு புதிய லிமிட்
  • ரூல்ஸ் நடைமுறைக்கு வந்துருச்சு
  • நினைச்ச நேரத்தில் எல்லாம் பணம் அனுப்ப முடியாது
நீங்க நினைக்கிற மாதிரி யுபிஐ -ல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது! லிமிட் வந்துருச்சு title=

UPI செயலி இருந்தால்போதும் கையில் பணம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு பெரிய கட்டணங்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் நீங்கள் கட்டிவிடலாம். ஆனால், வங்கிகளுக்கு பணப்பரிவர்த்தனைக்கு லிமிட் இருப்பதைபோல ஒருநாளைக்கு எவ்வளவு பணம் பரிவர்த்தனை செய்யலாம், ஏதேனும் லிமிட் இருக்கிறதா? என்ற தகவல் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. இப்போது யுபிஐ தினசரி பிரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, சாதாரண UPIக்கான பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் காப்பீடு, மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்கு UPI பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு இந்த வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐபிஓ (இனிஷியல் பப்ளிக் ஆஃபர்) மற்றும் சில்லறை நேரடித் திட்டத்திற்கான யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | குஷியில் Vi வாடிக்கையாளர்கள்... 130ஜிபி கூடுதல் டேட்டா இலவசம் - ஆனால் ஒரு ட்விஸ்ட் இருக்கு!

மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான UPI வரம்பு

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, டிசம்பர் 8, 2023 முதல், குறிப்பிட்ட துறைகளுக்கான UPI பரிவர்த்தனைகளின் வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு UPI செலுத்துவதற்கான வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கு முன், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு UPI செலுத்துவதற்கான வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது.

நபருக்கு நபர் UPI பரிவர்த்தனை

P2P UPI பரிவர்த்தனைகளுக்கு ஒவ்வொரு வங்கியும் அதன் சொந்த நிபந்தனைகளை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, HDFC வங்கி P2P (நபர் முதல் நபர்) மற்றும் P2M (நபர் முதல் வணிகர் வரை) UPI பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1 லட்சம் அல்லது 20 பரிவர்த்தனைகளுக்கு வரம்பை நிர்ணயித்துள்ளது. இந்த வரம்பு 24 மணிநேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விதிகளின்படி, தினமும் 20 UPI பரிவர்த்தனைகளைச் செய்யலாம். இதற்குப் பிறகு, பரிவர்த்தனையைத் தொடங்க வாடிக்கையாளர் 24 மணிநேரம் காத்திருக்க வேண்டும். மூன்றாம் தரப்பு UPI பயன்பாடுகளுக்கு 10 பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும் படிக்க | Vlog செய்ய மெர்சலான மொபைல்... சாம்சங் இறக்கிய ஸ்மார்ட்போன் - A to Z இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News