நிர்மலா தேவியிடம் மூன்றாம் கட்ட விசாரணை தொடங்கிய சந்தானம் குழு!!

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை மத்திய சிறையில் உள்ள பேராசிரியர் முருகனிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தியது.   

Last Updated : May 3, 2018, 01:49 PM IST
நிர்மலா தேவியிடம் மூன்றாம் கட்ட விசாரணை தொடங்கிய சந்தானம் குழு!! title=

தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, கைது செய்யப்பட்டு அவரிடம், சி.பி.சி.ஐ.டி., மற்றும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்த சந்தானம் கமிஷன் சார்பில் தனித்தனியாக விசாரணை நடக்கிறது. 

இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு துணைபோன பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், இதில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார் 

எனவே, நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சந்தான தலைமையிலான விசாரணை குழுவிற்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் வழங்கியுள்ளார்.

 இந்நிலையில், சிபிசிஐடி கஸ்டடியில் இருந்த முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாலும் அவர்கள் கூறும் தகவலின் படி வேறு யாரிடமாவது விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்பதாலும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு சந்தானம் ஆளுநரிடம் கேட்டார்.

அதனடிப்படையில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்களுக்கு கால அவகாசம் வழங்கி ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். 

அதனடிப்டையில், நிர்மலா தேவியிடம் மூன்றாம் கட்ட விசாரணையை சந்தானம் குழு தொடங்கிய உள்ளது. 

அதேபோன்று, நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை மத்திய சிறையில் உள்ள பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவன் கருப்பசாமியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

Trending News