காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு பின்பற்றவில்லை என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் அளிக்கும் தீர்ப்பு நாடாளுமன்ற முடிவுக்கு உட்பட்டதே என்று மத்திய அரசு கூறியது. மேலும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயார்
காவிரியில் இருந்து தினந்தோறும் தமிழகத்துக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் பயிர்கள் கருகின. இதனால் வேதனை அடைந்த பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.
காவிரி விவகாரத்தில் உத்தரவை பின்பற்றாத கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட்டு இறுதி எச்சரிக்கை விடுத்து உள்ளது. அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இருமாநில முதல்வர்களையும் அழைத்து பேசவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று டெல்லியில் இரு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய மந்திரி உமாபாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
டில்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்தித்த சித்தராமைய்யா, காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் சித்தாராமையா வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் 21-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழகத்துக்கு நொடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீரைக் கர்நாடகா திறக்க வேண்டும். 4 வாரத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்பினரும், விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காவிரியில் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை தமிழகத்திற்கு நாள்தோறும் 6000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று டெல்லியில் விசாரணை நடத்தியது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ''காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால் காவிரி நீர் பிரச்சினையே வந்திருக்காது. காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்கவில்லை? காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதே நிரந்தரத் தீர்வு. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு காவிரி விவகாரம் வழக்கு விசாரணைக்கு வந்தது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 8 மணிக்கு டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்கு செப்டம்பர் 20-ம் தேதி தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு நீர்திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீரை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, விஜயபாஸ்கர், சரோஜா, கருப்பண்ணன், முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டதால் கன்னட அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டனர்.
தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் பிறகு கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு இந்த மாதம் செப். 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தமிழகத்திற்கு கர்நாடகா காவிரி நீர் திறந்துவிட்டதை கண்டித்து பெங்ளூரூவில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடைகள் அடைக்கப்பட்டன, தமிழகத்தை சேர்ந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.
தமிழர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். காவிரியில் செப்டம்பர் 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு தினசரி 12,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று மேல் முறையீடு மனு மீதான விசாரணையில் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் பெரும் வன்முறை வெடித்தது.
காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்டு உத்தரவை அடுத்து பெங்களூருவில் வன்முறை வெடித்தது. கன்னட ஆதரவு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.
காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.
சம்பா சாகுபடிக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தது.
சம்பா சாகுபடிக்கு 10 நாட்களில் 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு, கடந்த மாதம் ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அது தொடர்பான ஆவணங்களை செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அளித்தது. அந்த ஆவணங்களில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கர்நாடகாவுக்கு எதிராக பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடாகாவில் முழு போராட்டம்.
கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தமிழக சேனல்கள் ஒளிபரப்பை கேபிள் டிவி சங்கங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து கர்நாடாகாவில் முழு போராட்டம்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் பல கன்னட அமைப்புகள் மற்றும் சங்கங்களும் மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரித்துள்ளன.
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் தமிழக அரசு சம்பா சாகுபடிக்காக காவிரியில் 50 டி.எம்.சி. கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. பஸ்கள் இயக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு கர்நாடகத்தில் விவசாயி களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.