IPL 2018 தொடரின் 26-வது போட்டியில் டெல்லி ட்ரேடெவில்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் நேற்று மோதின. இப்போட்டியில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் விளையாடும் 11 பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் நேற்று இரவு நடந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை கடைசி பந்தில் டெல்லியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெற இருக்கிறது. இந்த முதல் நாளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடிகர், நடிகைகள் இடம்பெற்று போட்டியை துவக்கி வைப்பர்.
இன்று, இந்தியா தனது முதல் டி20 கோப்பையினை கைப்பற்றிய தினம்!
செப்டம்பர் 24, 2007 அன்று, ஜோகன்னஸ்பர்க்கில் நடைப்பெற்ற டி20 உலக கோப்பையினில் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற தினம். இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்து 10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.
இந்த வெற்றியின் நொடிகளை BCCI தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டுள்ளது.
10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதி சுற்று போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.
இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது.
10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதி சுற்று போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகின்றன.
புனே அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இன்று நடைபெறும் 2-வது தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும்.
மும்பை அணி தகுதி சுற்று 1-ல் 20 ரன்கள் வித்தியாசத்தில் புனேயிடம் தோற்றது. ஆனால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததால் இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நக்சல் தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை தாம் ஏற்பதாக கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 25 பேர் பலியாயினர்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: பலியான அனைத்து வீரரகளின் குழந்தைகளின் முழு கல்விச்செலவை தாம் ஏற்கவுள்ளதாகவும், இது தொடர்பான நடவடிக்கைய துவக்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.