Good News for Pensioners: பாதுகாப்புத் துறையில் இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய முறையை எளிமையாக்கும் முயற்சியில், மத்திய அரசு மின்னணு ஓய்வூதியக் கட்டண உத்தரவை (EPPO) டிஜி லாக்கருடன் இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
மின்னணு ஓய்வூதியக் கட்டண உத்தரவை டிஜி லாக்கருடன் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கை 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும்
அகவிலைப்படி பற்றி அரசாங்கம் அறிவித்தபோது, ஊழியர்களுக்கு, அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டது. அரசாங்கம் நிலுவைத் தொகையை அளிக்க மறுத்துவிட்டது.
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம், அரசின் கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான உயிர் சான்றிதழ் அல்லது ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும்.
7th Pay Commission Pension News: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. இறந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் பெரிய அளவிலான அதிகரிப்பு இருக்கும் என மோடி அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
மத்திய இணை அமைச்சர் சிங், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அதிகப்படியான மருத்துவ கண்காணிப்பும் நிதி உதவியும் தேவைப்படுகின்றன. இந்த முடிவால், இந்த குழந்தைகளின் சுமுகமான வாழ்க்கை மற்றும் சிறந்த பொருளாதார நிலை உறுதி செய்யப்படும் என்று கூறினார்.
7th Pay Commission Relief News: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி வந்துவிட்டது. கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படியில் இருந்த முடக்கத்தை மோடி அரசு நீக்கியது. இதனுடன், ஊழியர்களின் டி.ஏ. 11 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் மற்றொரு செய்தியை அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
பொதுவாக எல்.டி.சி கிளெயிம்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 க்கு முன்னர் தீர்க்கப்படுகின்றன. ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு அதன் தேதியை நீட்டித்துள்ளது.
COVID-19 தொற்றுநோய் மற்றும் அதன் பின் விளைவுகளுக்கு மத்தியில், இப்போது, குடும்ப உறுப்பினரிடமிருந்து குடும்ப ஓய்வூதியம் மற்றும் இறப்புச் சான்றிதழைப் பெற்ற உடனேயே தற்காலிக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படலாம் என்று புதிய அறிவுறுத்தல்கள் தெரிவிக்கின்றன.
நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காத நிலை இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானதுதான். PFRDA உங்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில், நீங்கள் 70 வயதில் கூட ஓய்வூதியத்திற்கு தகுதி பெறலாம்.
7th Pay Commission: AICPI (அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) இன் சமீபத்திய தரவுகளின்படி, 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு குறைந்தபட்சம் 4% DA அதிகரிக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.