ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசு: 20-100% கூடுதல் ஓய்வூதியம்... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

Central Government Pensioners Pension Hike: 80 வயதை எட்டிய ஓய்வுபெற்ற மத்திய அரசு சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களையும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 26, 2024, 10:27 AM IST
  • தீபாவளிக்கும் முன்னதாக ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி.
  • ஓய்வூதிய உயர்வு தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள்.
  • 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அதிக நன்மைகள்.
ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசு: 20-100% கூடுதல் ஓய்வூதியம்... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? title=

Central Government Pensioners Pension Hike: இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளிக்கும் முன்னதாக, ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி கிடைத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு பரிசை அறிவித்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய பலன் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கருணைத்தொகை (Compassionate Allowance) எனப்படும் கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Central Government Pensioners: ஓய்வூதிய உயர்வு தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள்

80 வயதை எட்டிய ஓய்வுபெற்ற மத்திய அரசு சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களையும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த கூடுதல் கொடுப்பனவுகளை விநியோகிக்கும் செயல்முறையை எளிதாக்குவதே வழிகாட்டுதல்களின் நோக்கமாகும். CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் விதி 44 இன் துணை விதி 6 இன் விதிகளின்படி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை அடைந்த பிறகு, விதிகளின் படி ஓய்வூதியம் (Pension) மற்றும் கருணைக் கொடுப்பனவு வழங்கப்படும்.

Pensioners: 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அதிக நன்மைகள்

புதிய அறிவிப்புகளின் படி,

- 80 முதல் 85 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 20% உயர்வு கிடைக்கும். 
- 85 முதல் 90 வயது வரை உள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 30% உயர்வு கிடைக்கும்.
- 90 முதல் 95 வயது வரை உள்ள பணியாளர்களுக்கு 40% உயர்வு கிடைக்கும்.
- 95 முதல் 100 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 50% உயர்வு கிடைக்கும். 
- 100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 100% உயர்வு வழங்கப்படும்.

மேலும் படிக்க | Investment Tips: எவ்வளவு முதலீட்டில் எவ்வளவு லாபம் வரும் என்பதை கணக்கிட உதவும் எளிய ஃபார்முலா

இது சுற்றறிக்கையில் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. "உதாரணமாக, ஆகஸ்ட் 20, 1942 இல் பிறந்த ஓய்வூதியதாரர், ஆகஸ்ட் 1, 2022 முதல் அடிப்படை ஓய்வூதியத்தின் இருபது சதவீத விகிதத்தில் கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார். ஆகஸ்ட் 1, 1942 இல் பிறந்த ஓய்வூதியதாரர்களும்  ஆகஸ்ட் 1, 2022 முதல் அடிப்படை ஓய்வூதியத்தின் இருபது சதவீத விகிதம் கூடுதல் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்." என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

முதல் நாள் முதல் கூடுதல் ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுவார்கள்

மேலும், ஓய்வூதியதாரர் நிர்ணயிக்கப்பட்ட வயதை எட்டிய மாதத்தின் முதல் நாள் முதல் கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணை உதவித்தொகை அமலுக்கு வரும் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையின் அறிவிப்பில், கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஓய்வூதியத் தொகையானது ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிக வயதாகும் போது அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் ஓய்வூதியத்திற்கு தகுதியுள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்களின் உரிய பலன்களை தாமதமின்றி பெறுவதை உறுதி செய்ய, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து துறைகள் மற்றும் வங்கிகளிடமும், இந்த மாற்றங்கள் குறித்த தகவல்களை பரப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதியான ஓய்வூதியதாரர்கள், சரியான நேரத்தில் அவர்களுக்கான ஓய்வூதியத்தை எந்த வித சிக்கலும் இன்றி பெறுவதை உறுதி செய்யும்.

மேலும் படிக்க | NPS உறுப்பினர்களுக்கு குட் நியுஸ்: வருகிறது என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு... இனி வசதிகள் அதிகரிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News