குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாநிலங்கள் சார்பிலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
நாட்டின் 68-வது குடியரசு தின விழா டெல்லியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் முதல் முறையாக தேசிய பாதுகாப்புப் படையின் கறுப்பு பூனை வீரர்கள், தேஜாஸ் போர் விமானங்கள், தனுஷ் பீரங்கிகள் அணிவகுப்பில் பங்கேற்றன.
டெல்லியில் குதிரைப்படை வீரர்கள் அணிவகுக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சிறப்பு விருந்தினரான அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயன் டெல்லி ராஜபாதைக்கு வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் வரவேற்றனர். விழா மேடையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியேற்றினார்.
இந்தியாவின் குடியரசு தினவிழா, தமிழக அரசு சார்பில் சென்னையில் மெரினா கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றினார்.
குடியரசு தின விழாவையொட்டி அசாம் மாநிலத்தில் தொடர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் மற்றும் அசாமில் பலத்த பாதுகாப்பையும் மீறி குடியரசு தின நாளான இன்று தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவங்களில் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
உல்பா தீவிரவாதிகளே இத்தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாகவும். தங்களது இருப்பை உணர்த்தும் விதமாகவே குடியரசு தினத்தன்று அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்.
இன்று நாடு முழுவதும் 68-வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றினார்!!
குடியரசுதின விழாவை முன்னிட்டு இசை முழக்கத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றினார்.
நாட்டின் 68-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்!!!
இன்று நாடு முழுவதும் 68-வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது.
குடியரசுதின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மரியாதை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களின் பாரம்பரிய இசை முழங்கப்பட்டது.
இன்று நாடு முழுவதும் 68-வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது.
இந்த விழாவில் அபுதாபி இளவரசர் முஹம்மது பின் சயீத் அல் நயான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை இன்று காலை 9.40 மணி அளவில் ஏற்ற உள்ளார். இந்த விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் ஹசித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்பட ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பினர் குடியரசு தின விழாவின் போது நாசவேலையில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 60,000 மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள முக்கிய மார்க்கெட் பகுதிகளான சரோஜினி நகர், லாஜ்பத் நகர், கமலா மார்க்கெட், நிஜாமுதீன் மற்றும் புது டெல்லி ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டின் 68_வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி சமுக வலைத்தளம் மூலமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
டுவிட்டரில் அவர் வாழ்த்து பதிவில் கூறியதாவது:- அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.