பீசண்ட் தீவு: இரு நாடுகள் ஆட்சி செய்யும் உலகின் தனித்துவமான தீவு!

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நட்புறவு: உலகில் எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களை உலகில் அதிகம் பார்த்து வருகிறோம். எந்த நாடும் தனது நிலத்தை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 18, 2022, 03:35 PM IST
  • பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நட்புறவு.
  • விசேஷ நாட்களை தவிர யாரும் செல்ல அனுமதி இல்லை
  • 1659 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சிறப்பு ஒப்பந்தம்.
பீசண்ட் தீவு: இரு நாடுகள் ஆட்சி செய்யும் உலகின் தனித்துவமான தீவு! title=

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நட்புறவு: உலகில் எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களை உலகில் அதிகம் பார்த்து வருகிறோம். எந்த நாடும் தனது நிலத்தை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை. இது தொடர்பாக அடிக்கடி போர்களும் தாக்குதல்களும் நடைபெறுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் பதற்றம் இதற்கு சான்றாகும். ஆனால், இரு நாடுகளும் கூட்டாகப் பகிர்ந்து கொள்ளும் தீவு ஒன்று உலகில் உள்ளது. இந்த தீவு பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் எல்லைக்கு இடையே அமைந்துள்ளது. இந்த இரு நாடுகளும் ஆண்டுக்கு 6-6 மாதங்கள் ஆட்சி செய்கின்றன. சண்டை, சச்சரவு இல்லாமல் இந்தக் கூட்டாண்மை ஆட்சி நடந்து வருகிறது.

விசேஷ நாட்களை தவிர யாரும் செல்ல அனுமதி இல்லை

இந்த தீவின் பெயர் பீசண்ட். ஸ்பெயின் இங்கு பிப்ரவரி 1 முதல் ஜூலை 31 வரை ஆட்சி செய்கிறது, பிரான்ஸ் ஆகஸ்ட் 1 முதல் ஜனவரி 31 வரை ஆட்சி செய்கிறது. இந்த நவடிக்கை 350 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீசண்ட் என்று பெயரிடப்பட்ட இந்த தீவு இரு நாடுகளின் எல்லைக்கு இடையே ஓடும் பிடாசோவா ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. இந்த தீவில் யாரும் வசிக்கவில்லை. விசேஷ நாட்களைத் தவிர, யாரும் இந்தத் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதும் இல்லை.

மேலும் படிக்க | சாதித்த இந்தியர்! $1 பில்லியன் வருவாயுடன் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த Zoho!

1659 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சிறப்பு ஒப்பந்தம்

இந்த தீவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடம் அமைந்துள்ளது. இது 1659ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடர்புடையது. உண்மையில், முன்பு பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டும் இந்தத் தீவை உரிமை கொண்டாடின. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆனால் 1659 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையே 3 மாதங்கள் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் பைன்ஸ் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஸ்பானிய மன்னர் பிலிப் IV மற்றும் பிரெஞ்சு மன்னர் லூயிஸ் XIV ஆகியோரின் மகளின் திருமணத்துடன் ஒத்துப்போனது. அன்றிலிருந்து இரு நாடுகளும் சுழற்சி முறையின் கீழ் இந்த தீவை ஆட்சி செய்கின்றன. ஸ்பெயினின் எல்லையோர நகரமான சான் செபாஸ்டியனின் கடற்படைத் தளபதியும் பிரான்சின் பேயோனும் இந்தத் தீவின் செயல் ஆளுநர்களாக இருப்பதே ஆட்சி முறை.

200 மீட்டர் நீளம் கொண்ட தீவு 

இரு நாடுகளுக்கும் இடையே அமைந்துள்ள இந்த தீவு 200 மீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் மட்டுமே கொண்டது. இன்றும் முதியவர்கள் மத்தியில் இது ஒரு விவாதப் பொருளாகவே உள்ளது. இருப்பினும், படிப்படியாக இந்த தீவு அழிந்து வருகிறது என்பது கவலைக்குரிய விஷயம். இரு நாடுகளும் ஆட்சி புரிந்தாலும், அதனைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

மேலும் படிக்க | G20 Summit: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News