7th Pay Commission: மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்!

7th Pay Commission: நீண்ட காலமாகவே ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 15, 2023, 07:07 AM IST
  • லெவல்-3 ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரையுள்ளது.
  • ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத டிஏ நிலுவையில் உள்ளது.
  • பணவீக்கத்தின் காரணமாக ஊழியர்களுக்கு அரசு டிஏ-வை 3% உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission: மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! title=

7th Pay Commission: ஹோலி பண்டிகைக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.  நிலுவையிலுள்ள அகவிலைப்படி கிடைக்கபோவது மட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு போன்ற பல நல்ல விஷயங்கள் நடக்கப்போகிறது.  அடுத்த மாதத்தில் ஊழியர் சங்கத்தின் மூன்று அழுத்தமான கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.  நீண்ட காலமாகவே ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான பிரச்சினை இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.  தற்போது வெளியாகியுள்ள செய்திகளின்படி, லெவல்-3 ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது.  லெவல்-13 அல்லது லெவல்-14 ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,15,900 வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Income Tax Rebate: சூப்பர் செய்தி!! இனி இவர்கள் வரிவிலக்கின் பலனைப் பெறுவார்கள்!! 

மத்திய அரசு அடுத்த மாதம் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.  அதன்படி அரசாங்கம் ஃபிட்மென்ட் காரணியை மூன்று மடங்கு உயர்த்தினால், ஊழியர்களின் சலுகைகள் தவிர்த்து ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 18,000 X 2.57 அல்லது ரூ. 46,260 ஆக இருக்கும். கூடுதலாக, ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்பட்டால், சம்பளம் 26000 X 3.68 அல்லது ரூ.95,680 ஆக இருக்கும். மூன்று முறை ஃபிட்மென்ட் காரணியை உயர்த்த அரசாங்கம் ஒப்புக்கொண்டால் ஊழியர்களின் சம்பளம் ரூ.63,000 ஆக இருக்கும்.

நாட்டில் நிலவிவரும் பணவீக்கத்தின் விளைவால் அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) 3% வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் தவணையாக அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4% வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் படிக்க | நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்டை நிறைக்கும் புதிய வரி விதிப்பு முறை - நிர்மலா சீதாராமன் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News