ITR: 5 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தாலும் யாரெல்லாம் வருமான வரி கட்ட வேண்டாம்?

Income Tax Exemption: வருமான வரி விதிகளின்படி, பல மூத்த குடிமக்கள் ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயமில்லை, இது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 2, 2023, 03:14 PM IST
  • வருமான வரித்துறையின் பிரிவு 194-P
  • வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு
  • வருமான வரிக் கணக்கு 12-BBA படிவம்
ITR: 5 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தாலும் யாரெல்லாம் வருமான வரி கட்ட வேண்டாம்? title=

ஐடிஆர் தாக்கல்: வருமான வரித் துறையின் விதிகளின்படி, ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயமில்லை என்ற விதிமுறைகள் சிலருக்கு உண்டு. அவர்களின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தாலும் அவர்கள் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், இதற்காக சில வழிகாட்டுதல்கள் அல்லது நிபந்தனைகளையும் வருமான வரித்துறை விதித்துள்ளது.

நீண்ட காலமாக வரி செலுத்துவோருக்கு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் (ITR Filing Last Date) ஐடிஆர் தாக்கல் செய்யுமாறு வருமான வரித் துறை (ITR) அறிவுறுத்தி வருகிறது. ஆனால், சிலர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத் தேவையில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வகைக்கு விலக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தச் சிறப்பு விலக்கு யாருக்குக் கிடைத்தது, அதற்கான நிபந்தனைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

31 மார்ச் 2023 முதல் வயது கணக்கீடு

வருமான வரி விதிகளின்படி, பல மூத்த குடிமக்கள் ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயமில்லை. அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தாலும் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும், இதற்காக சில வழிகாட்டுதல்கள் அல்லது நிபந்தனைகளையும் வருமான வரித்துறை விதித்துள்ளது.

உதாரணமாக மார்ச் 31, 2023 அன்று 75 வயதை நிறைவு செய்தவர்கள், இந்த விலக்கின் பலனைப் பெறலாம். இது மட்டுமின்றி, வேறு சில விதிகளும் பொருந்தும், அவற்றை நிறைவேற்றும் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு கிடைக்கும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.... வட்டியை அள்ளித் தரும் ‘சில’ வங்கிகள்!

வருமான ஆதாரம்

75 வயதை கடந்தவர்கள் மற்றும் வருமான ஆதாரமாக ஓய்வூதியம் மட்டுமே உள்ளவர்களுக்கு ஐடிஆர் தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். வருமான வரித்துறை விதிகளின்படி, அவர்களின் வருமானம் ஓய்வூதியம் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தின் வட்டியாக இருக்க வேண்டும். இது தவிர, எந்த வங்கியில் ஓய்வூதியம் வருகிறது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். 

வருமான வரித்துறையின் புதிய விதியின் கீழ், 2021இன் கீழ், 1961 இல், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், புதிய பிரிவு 194-Pயின் படி, வயது முதிர்ந்தவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் வங்கி வைப்புத் தொகையிலிருந்து வட்டி பெறுபவர்கள், ஐடிஆர் தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். 

வங்கியில் சமர்ப்பிக்க வேண்டிய படிவம்

வருமான வரித்துறையின் பிரிவு 194-P விதியின் கீழ், வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு பெற, ஒரு நபர் வங்கி மூலம் ஒரு அறிவிப்பை செய்ய வேண்டும். 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடிமகன் 12-BBA படிவத்தை பூர்த்தி செய்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த படிவத்தில் நீங்கள் ஓய்வூதியம் மற்றும் வங்கியின் நீண்டகால வைப்புத்தொகை அல்லது வேறு ஏதேனும் முதலீட்டின் மீதான வட்டி வருமானத்தின் விவரங்களை கொடுக்க வேண்டும். மேலும், குடிமகன் 12-BBA படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் ஐடிஆர் நிரப்பப்பட்டதாகக் கருதப்படும். அதன் பிறகு தனி ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

மேலும் படிக்க | இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு... ஆதார் அட்டை அப்டேட் பண்ணலைன்னா சிக்கல் தான்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News