NPS: ரூ.3 கோடியுடன் ரிடையர்மெண்ட், மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம், முழு கணக்கீடு இதோ

National Pension Scheme: NPS இல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முதலீடு செய்யும் பொறுப்பு, பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்களுக்கு PFRDA ஆல் வழங்கப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 28, 2024, 10:53 AM IST
  • NPS: இதன் மூலம் பயன் பெறுவது எப்படி?
  • கார்பஸ் வயது மற்றும் முதலீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
  • 80CCD(1B) இல் கூடுதல் வரி விலக்கு.
NPS: ரூ.3 கோடியுடன் ரிடையர்மெண்ட், மாதா மாதம் அசத்தலான ஓய்வூதியம், முழு கணக்கீடு இதோ

Retirement Planning: பெரும்பாலும் அரசு வேலைகளுக்காக முயற்சி செய்து அது கிடைக்கவில்லை என்றால் பலர் வேதனை கொள்வதுண்டு. ஆனால், அப்படி ஏமாற்றம் அடையத் தேவையில்லை. ஏனெனில், அரசு வேலைகளில் கிடைக்கும் அதே சலுகைகள் தனியார் வேலைகளிலும் கிடைக்கும். அரசு வேலைகளில் பெரிய நன்மையாக பார்க்கப்படுவது பணி ஓய்வுக்கு பிறகு கிடைக்கும் நன்மைகள். அனைவரும் பணி ஓய்வுக்கு பிறகான திட்டமிடலை செய்ய வேண்டும். தனியார் வேலைகளிலும். ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தின் பலன் கிடைக்கும். அதற்கான ஒரு சிறந்த வழி தேசிய ஓய்வூதிய முறை (National Pension System). ஒருவர் என்பிஎஸ்ஸில் எவ்வளவு விரைவில் முதலீடு செய்யத் தொடங்குகிறாரோ, அந்த அளவுக்கு ஓய்வுக்குப் பிறகு அவருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.

Add Zee News as a Preferred Source

NPS: இதன் மூலம் பயன் பெறுவது எப்படி? 

முதலில், இந்த திட்டத்தின் மூலம் ஒரு பெரிய ஓய்வூதிய நிதியை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரு நல்ல ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இருப்பினும், என்பிஎஸ் முதலீட்டில் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. இது உங்கள் ஆண்டுத் தொகை மற்றும் அதன் மீதான மதிப்பிடப்பட்ட வருமானத்தைப் பொறுத்தது.

கார்பஸ் வயது மற்றும் முதலீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்

உதாரணமாக, 25 வயதாகும் ஒரு நபர், ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 முதலீடு செய்தால், 60 வருடங்களில் ஓய்வு பெறும்போது அவரது மதிப்பிடப்பட்ட கார்பஸ் என்னவாக இருக்கும்? மேலும், மாதாந்திர ஓய்வூதியம் எவ்வளவு இருக்கும்? என்பிஎஸ் கால்குலேட்டரின் (NPS Calculator) உதவியுடன் இதை புரிந்துகொள்ளலாம். 

- ஓய்வு பெறும் வயது 60.
- தற்போதைய வயது 25.
- NPS இல் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் முதலீடு.

SBI ஓய்வூதிய நிதியத்தின் NPS கால்குலேட்டரில் இருந்து நீங்கள் ஓய்வு பெறும்போது எவ்வளவு நிதி மற்றும் ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

- NPS இல் மாதாந்திர முதலீடு: ரூ.10,000 
- 35 ஆண்டுகளில் மொத்த பங்களிப்பு: ரூ42 லட்சம்
- முதலீட்டில் மதிப்பிடப்பட்ட வருமானம்: 10%
- முதிர்வுக்கான மொத்தத் தொகை: ரூ.3.75 கோடி
- ஆன்னுவிடி: 40% (ரூ.1.5 கோடி)
- மதிப்பிடப்பட்ட வருடாந்திர விகிதம்: 6%
- 60 வயதில் ஓய்வூதியம்: மாதம் ரூ.74,958 

(குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள கணக்கீடுகள் தோராயமானவை. உண்மையான எண்ணிக்கையில் வேறுபாடு இருக்கலாம்.)

மேலும் படிக்க | Post Office Schemes: வருமானத்தை அள்ளித் தரும் அசத்தலான ‘5’ தபால் நிலைய திட்டங்கள்..!!

நீங்கள் NPS இல் 40 சதவீத ஆனுவிட்டியை (Annuity) எடுத்துக் கொண்டால் (குறைந்தபட்சம் இந்த அளவை பராமரிக்க வேண்டியது அவசியம்), மற்றும் வருடாந்திர விகிதம் 6 சதவீதமாக இருந்தால், ஓய்வுக்குப் பிறகு நீங்கள் மொத்தமாக ரூ. 2.25 கோடியைப் பெறுவீர்கள். மேலும் ரூ. 1.5 கோடி வருடாந்திரமாகச் செல்லும். இந்த ஆண்டுத் தொகையிலிருந்து, ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.75 ஆயிரம் ஓய்வூதியமாகப் பெறுவீர்கள். நீங்கள் வருடாந்திர தொகையை அதிகமாக வைத்திருந்தால், ஓய்வூதியமும் அதிகமாக கிடைக்கும். NPS இல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முதலீடு செய்யும் பொறுப்பு, பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்களுக்கு PFRDA ஆல் வழங்கப்படுகிறது. அவர்கள் உங்கள் முதலீடுகளை ஈக்விட்டி, அரசு பத்திரங்கள் மற்றும் அரசு சாரா பத்திரங்கள் மற்றும் நிலையான வருமான கருவிகளில் முதலீடு செய்கிறார்கள்.

ஆன்னுவிடி, அதாவது வருடாந்திரம் என்பது உங்களுக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, தேசிய ஓய்வூதிய அமைப்பில் (என்பிஎஸ்) குறைந்தபட்சம் 40 சதவீத தொகையை வருடாந்திரமாக வாங்குவது அவசியம். இந்தத் தொகை அதிகமாக இருந்தால், ஓய்வூதியத் தொகையும் அதிகமாக இருக்கும். வருடாந்திரத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்ட தொகை ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமாகப் பெறப்படுகிறது. மீதமுள்ள NPS தொகையை மொத்தமாக திரும்பப் பெறலாம்.

NPS: 80CCD(1B) இல் கூடுதல் வரி விலக்கு

NPS -இல், டயர் 1 மற்றும் டயர் 2 என இரண்டு வகையான கணக்குகளைத் திறக்கலாம். இதில், டயர் 1 ஓய்வூதியக் கணக்கு மற்றும் டயர் 2 தன்னார்வ சேமிப்புக் கணக்காகும். யார் வேண்டுமானால் டயர் 1 கணக்கை திறக்க முடியும் ஆனால் நீங்கள் டயர் 1 கணக்கு வைத்திருந்தால் மட்டுமே டயர் 2 கணக்கை திறக்க முடியும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் பங்களிப்பில் பெறும் வரி விலக்கு, டயர் 1 கணக்கில் மட்டுமே கிடைக்கும்.

NPS இன் கீழ், வருமான வரிச் சட்டத்தின் 80CCD(1B) பிரிவின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு வரி விலக்கின் (Tax Exemption) பலன் கிடைக்கும். பிரிவு 80C இன் கீழ் நீங்கள் ரூ. 1.5 லட்சம் வரம்பை முடித்திருந்தால், கூடுதல் வரிச் சேமிப்பில் NPS உங்களுக்கு உதவும். இந்தத் திட்டத்தின் முதிர்வுத் தொகையில் 60% வரை திரும்பப் பெறுவதற்கு வரி இல்லை.

(துறப்பு: NPS இல் உத்தரவாதமான ஓய்வூதியம் இல்லை. முதலீடு அல்லது வருடாந்திர வருமானம் மதிப்பிடப்படுகிறது. முதலீடு செய்யத் தொடங்கும் முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுகவும்.)

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் ஜம்முனு உயரப்போகுது அகவிலைப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News