EPFO முக்கிய அப்டேட்: PF தொகையை வைத்துக்கொண்டு உங்கள் ஓய்வு காலத்தை கழிக்க முடியுமா? பிற வழிகள் இதோ

EPFO Update: வருங்கால வைப்பு நிதி (PF) சேமிப்பு, ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு பெரிய சொத்தாக இருக்கும். எனினும், இதில் பெறப்படும் தொகை, பணி ஓய்வு காலத்தை கழிக்க போதுமானதாக இல்லாமலும் போகலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 23, 2023, 12:49 PM IST
  • ஓய்வு பெற்றவர்களுக்கு EPF மிக முக்கியம்: எவ்வாறு?
  • ஓய்வூதியத்திற்கு PF கணக்கு நிதி ஏன் போதுமானதாக இருக்காது?
  • உங்கள் ஓய்வு கால சேமிப்புக்கு இந்த விருப்பங்களை நீங்கள் பரிசீலிக்கலாம்.
EPFO முக்கிய அப்டேட்: PF தொகையை வைத்துக்கொண்டு உங்கள் ஓய்வு காலத்தை கழிக்க முடியுமா? பிற வழிகள் இதோ title=

அனைவரது வாழ்விலும் பணி ஓய்வுக்காலம் என்பது மிக முக்கியமான ஒரு காலமாகும். இந்த ஓய்வு காலத்தை அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டுமானால், இதற்கான ஏற்பாடுகளை நாம் பணியில் இருக்கும்போதே செய்ய வேண்டியது மிக அவசியம். ஓய்வுக்கால திட்டமிடுதலுக்கு, உங்கள் முதுமைக்கு போதுமான கார்பஸை உருவாக்க உகந்த சேமிப்பு மற்றும் முதலீடுகள் தேவை. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் நிர்வகிக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், தனியார் துறையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய கார்பஸை உருவாக்க உதவுகிறது.

வருங்கால வைப்பு நிதி (PF) சேமிப்பு, ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு பெரிய சொத்தாக இருக்கும். எனினும், இதில் பெறப்படும் தொகை, பணியில் இல்லாத ஓய்வு காலத்தை கழிக்க போதுமானதாக இல்லாமலும் போகலாம். 

ஓய்வு பெற்றவர்களுக்கு EPF மிக முக்கியம்: எவ்வாறு?

சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களும் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை ஒவ்வொரு மாதமும் தங்கள் EPF கணக்கில் செலுத்துகிறார்கள். மேலும் முதலாளி / நிறுவனமும் சமமான பங்களிப்பை செய்கின்றன. இருப்பினும், முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33 சதவீதம் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செல்கிறது.

PF கணக்கு ஓய்வூதிய திட்டமிடலுக்கான ஒரு பாரம்பரிய வழியாக உள்ளது. இது ஓய்வுக்குப் பிறகு கணிசமான கார்பஸை வழங்குகிறது. மேலும், இதன் பங்களிப்புகள், சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுக்குப் பிறகு வரும் மொத்தத் தொகை அனைத்தும் வரி இல்லாதவை. இது ஓய்வூதியத் திட்டமிடலுக்கு மிகவும் இலாபகரமான விருப்பங்களில் ஒன்றாகும்.

ஓய்வூதியத்திற்கு PF கணக்கு நிதி ஏன் போதுமானதாக இருக்காது?

PF கணக்கு நிதிகள் கணிசமான கார்பஸை வழங்கினாலும், ஒருவரது பணி ஓய்வு ஆண்டுகள் முழுவதும் தேவையான நிதியை அளித்து அவருக்கு ஆதரவு அளிக்க இவை போதுமானதாக இல்லாமல் போகலாம். PF கணக்கில் சம்பாதித்த வட்டி கூட்டு அடிப்படையில் (காம்பவுட் பேசிஸ்) வேலை செய்கிறது. மேலும் இது பணியாளர்களுக்கு கணிசமான தொகையை வழங்குகிறது.

இருப்பினும், பணவீக்கத்தை முறியடிக்கும் திறன் இதற்கு இல்லை. ஓய்வு காலத்தின் நிதி பாதுகாப்பிற்கு PF முதிர்வுத் தொகையை மட்டுமே நம்பியிருப்பது பணவீக்க அழுத்தங்கள் காரணமாக ஒரு பிரச்சனை ஆகலாம். ஆகையால் பணவீக்கத்தை முறியடிக்க பங்குச்சந்தை பங்குகள் அல்லது ஓய்வூதிய வருமானத்தின் பிற நம்பகமான ஆதாரங்களில் முதலீடு செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் ஓய்வு கால சேமிப்புக்கு பின்வரும் விருப்பங்களை நீங்கள் பரிசீலிக்கலாம்:

ஈக்விட்டி: ஈக்விட்டி சந்தை மிகவும் நிலையற்றதாக இருந்தாலும், பணவீக்கத்தால் ஏற்படும் நிதி பற்றாக்குறையை நிர்வகிக்க இது அதிக வருமானத்தை வழங்குகிறது. இருப்பினும், இது ஒரு ஆபத்தான முதலீடாக இருக்கும். இதில் நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெறுவது அவசியம்.

மேலும் படிக்க | 20% வருமானம் தரும் சூப்பர் ஓய்வூதியத் திட்டம்! SBI தரும் அற்புதமான 4 பிளான்கள்

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS): NPS இல் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் பணிபுரியும் போது வரி விலக்குகளைப் பெறலாம். மேலும் ஓய்வு பெற்ற பிறகு நீங்கள் நிலையான மாதாந்திர தொகையையும் பெறுவீர்கள். இது உங்கள் PF கணக்கிலிருந்து பெறப்பட்ட ஓய்வூதிய நிதிக்கு ஒரு சிறந்த கூடுதல் தொகையாக இருக்கும். 

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS): நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், SCSS திட்டத்தில் முதலீடு செய்ய ஓய்வு பெறுவதற்கு முந்தைய சில வருடங்களை நீங்கள் பயன்படுத்தலாம். 8 சதவீதத்திற்கும் அதிகமான கவர்ச்சிகரமான வருவாயை வழங்குவதால், 5 ஆண்டு காலத்திற்குப் பிறகு குறிப்பிடத்தக்க முதிர்வுத் தொகையை இது உங்களுக்கு வழங்கும். கூடுதலாக, நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கும் போதே வரிச் சலுகைகளைப் பெறவும் இது உதவுகிறது.

மியூச்சுவல் ஃபண்டுகள்: ஈக்விட்டி சந்தை கணிக்க முடியாத மற்றும் நிலையற்றதாக இருந்தாலும், மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் டொமைனில் முதலீடு செய்வதன் மூலம் அபாயங்களைக் குறைக்கலாம். இந்த நிதிகள் நிபுணத்துவ நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன மற்றும் பங்குச் சந்தையில் பல்வேறு துறைகளில் முதலீடுகளின் பல்வகைப்படுத்தலை வழங்குகின்றன, இது ஆபத்தைக் குறைக்கும்.

மேலும் படிக்க | EPS Pension Withdrawal: இந்த படிவங்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News