பொடுகு பிரச்சனைக்கு தீர்வு: இந்த எண்ணெயை எலுமிச்சை சாறுடன் மசாஜ் செய்க

கடுகு எண்ணெய் முடியை வலுவாகவும் கருப்பாகவும் மாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெயின் பண்புகள் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 12, 2022, 04:40 PM IST
  • தலைமுடிக்கு கடுகு எண்ணெய்
  • கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்
  • கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை
பொடுகு பிரச்சனைக்கு தீர்வு: இந்த எண்ணெயை எலுமிச்சை சாறுடன் மசாஜ் செய்க title=

தலைமுடிக்கு கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை: கடுகு எண்ணெய் பல வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனை உணவில் பயன்படுத்தினால் பல உடல்நலக் கோளாறுகள் நீங்கும். பலர் கடுகு எண்ணெயை முடி மற்றும் சருமத்தில் தடவுவார்கள். ஆனால் கடுகு எண்ணெய் முடியை வலுவாகவும் கருப்பாகவும் மாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெயின் பண்புகள் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. மாறாக எலுமிச்சை சாற்றை அதில் தடவி வந்தால் பொடுகு பிரச்சனைகளும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சையை தலைமுடிக்கு தடவுவதால் ஏற்படும் நன்மைகளை இப்போது தெரிந்து கொள்வோம்.

எலுமிச்சை பழத்தின் பண்புகள்
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை, பல மடங்கு அதிகரிக்கிறது. வைட்டமின்-ஏ, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் எலுமிச்சை பழத்தில் உள்ளன. அதேபோல் எலுமிச்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

கடுகு எண்ணெயில் எலுமிச்சை சாற்றை தலைமுடிக்கு தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்

இயற்கை கண்டிஷனர்: கடுகு எண்ணெயில் ஆல்ஃபா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் தலைமுடிக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. எலுமிச்சம் பழச்சாறு கடுகு எண்ணெயுடன் கலந்து தினமும் தலைமுடிக்கு தடவி வந்தால் கூந்தல் பளபளப்பாக இருக்கும். வாரம் இருமுறை எலுமிச்சை சாறு தடவி வந்தால் பொடுகு பிரச்சனை குறையும்.

கூந்தல் ஊட்டச்சத்து: முடி உதிர்தல் மற்றும் உடைதல் போன்ற பிரச்சனைகளால் பலர் விரக்தியடைந்துள்ளனர். முடி உதிர்வதற்கும் உடைவதற்கும் காரணம், முடிக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காததுதான். இது படிப்படியாக உங்கள் முடியை சேதப்படுத்தும். அப்படியானால், தினமும் கடுகு எண்ணெயைக் கொண்டு உங்கள் தலைமுடியை மசாஜ் செய்வது உங்கள் கூந்தலை உள்ளிருந்து வலிமையாக்கும்.

பொடுகை குறைக்கிறது: கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை பொடுகு பிரச்சனையை நீக்கும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது: கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு, முடி உதிர்தல் மற்றும் உயிரற்ற கூந்தலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. இந்த எண்ணெயைக் கொண்டு உங்கள் தலைமுடியைத் தொடர்ந்து மசாஜ் செய்வது உங்கள் தலைமுடியில் சுழற்சியை மேம்படுத்தும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஏற்படும் கொழுப்புக் கட்டிகளுக்கும் கேன்சருக்கும் தொடர்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News