வெள்ளை முடியை விரட்ட அற்புதமான இயற்கை வீட்டு வைத்தியம்

இனி வெள்ளை முடியைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, இந்த வீட்டு வைத்தியத்தை கடைப்பிடித்து கருப்பு முடி பெறும் கனவை நிறைவேற்றுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2022, 02:01 PM IST
  • நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்
  • கருஞ்சீரகம் மற்றும் ஆலிவ் எண்ணெய்
  • மருதாணி மற்றும் தேங்காய் எண்ணெய்
வெள்ளை முடியை விரட்ட அற்புதமான இயற்கை வீட்டு வைத்தியம் title=

சிறு வயதிலேயே முடி நரைக்க டென்ஷன் ஒரு முக்கிய காரணமாகிறது. இதனை சரி செய்ய விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை, மாறாக, சமையலறையில் இருக்கும் பொருட்களின் மூலம் இயற்கையாகவே வெள்ளை முடியை கருப்பாக்க முடியும்.

பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கெமிக்கல் நிறைந்த சாயம் மற்றும் முடி நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள், இதனால் அவர்களின் தலைமுடி கருமையாக மாறாமல் மோசமடையத் தொடங்குகிறத. எனவே உங்கள் நரை முடியை கருமையாக்குவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்

கருப்பு முடி பெற வீட்டு வைத்தியம்

நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்
நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால் வெள்ளை முடி கருமையாகிவிடும். 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை போட்டு ஒரு பாத்திரத்தில் சூடாக்கவும். ஆறிய பின் தலைமுடியில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். பின்னர் 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

கருஞ்சீரகம் மற்றும் ஆலிவ் எண்ணெய்
1 தேக்கரண்டி கருஞ்சீரகத்தில் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலக்கவும். இப்போது முடியின் வேர்களில் மசாஜ் செய்யவும், பின்னர் 1 மணி நேரம் கழித்து ஷாம்பு செய்யவும். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

மருதாணி மற்றும் தேங்காய் எண்ணெய்
4 ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கொதிக்க வைத்து அதில் மருதாணி இலைகளைப் போடவும். மருதாணியின் நிறம் எண்ணெயில் வர ஆரம்பித்ததும், கேஸ்ஸை அனைக்கவும். இந்த எண்ணையை தலைமுடியில் தடவி மசாஜ் செய்யவும். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு செய்யவும்.

கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் உயிர்-செயலில் உள்ள பொருட்கள் உள்ளன, இது முடிக்கு முழு ஊட்டச்சத்தை அளிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் பேஸ்ட்டை தலைமுடியில் தடவினால் நரை முடியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். 

(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News