Sesame Ball: எள்ளுருண்டையில் இவ்வளவு அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?

ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்ற பழமொழியை கேட்டிருக்கலாம்! எளிமையான, விலை குறைவான எள்ளுருண்டையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை எடுத்துக்காட்டும் ஆரோக்கிய மொழி இது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 17, 2022, 02:09 PM IST
Sesame Ball: எள்ளுருண்டையில் இவ்வளவு அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா? title=

நமது ஆரோக்கியத்தின் அடிப்படை நாம் உண்ணும் உணவுதான். வழக்கமாக நாம் சாப்பிடும் உணவுகளுடன், அவ்வப்போது சாப்பிடும் திண்பண்டங்களும் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

ஆனால், அதிலும் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட திண்பண்டங்களில் ஒன்றுதான் எள்ளுருண்டை.

தமிழ்நாட்டில் அனைவரும் விரும்பி உண்ணும் திண்பண்டங்களில், மிகவும் பழமையானது எள்ளுருண்டை என்றாலும், இது என்றென்றும் சிறப்பான சத்துக்களைத் தரும் ஆரோக்கிய தீனியாக இருக்கிறது.

அதனால்தான், தமிழகத்தில் எள்ளுருண்டை என்ற பெயரில் உண்ணப்படும் இந்த தீனி, பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் பிரபலமாக உண்ணப்படுகிறது.

பொதுவாக இந்தியா முழுவதுமே, எள்ளுடன் வெல்லம் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டையில் அளப்பறிய சத்துக்கள் இருக்கின்றன.எள்ளின் தன்மையுடன், வெல்லத்தின் நற்குணங்கள் இணைந்து இந்த திண்பண்டத்தை மிகவும் சத்துள்ளதாக மாற்றிவிடுகிறது.

READ ALSO | Sesamin: புற்றுநோய் செல்களை அழிக்கும் கருப்பு எள்! அளவுக்கு மிஞ்சினால்?

காரம் சேர்த்தும் எள்ளுருண்டை செய்யும் வழக்கமும் தமிழ்நாட்டில் உள்ளது. பல்வேறு கிராமங்களில் தற்போதும் காரம் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டை திண்பண்டமாக இருக்கிறது. ஆனால், பொதுவாக கடைகளில் விற்கப்படுவதை காணமுடிவதில்லை.

குளிர்காலத்தில் நமக்குத் தேவையான சத்துக்களை, எள் லட்டு, எள் மிட்டாய், போன்ற தீனிகளில் மூலம் பெற்றுக் கொள்ளலாம். எள் (Sesame Seeds) நமது உடலை சூடாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

எனவே குளிர்காலத்தில் எள்ளுருண்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

எள்ளின் அற்புதமான நன்மைகளை கருத்தில் கொண்டுதான், எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை, எள்ளெண்ணெய் என்று சொல்லாமல், நல்லெண்ணெய் என்று சொல்லி, அதை சமையல் எண்ணெயாக (Cooking Oil) பயன்படுத்துகிறோம்.

ALSO READ | காலையில் வெறும் வயிற்றில் எள் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை தெரியுமா?

எள்ளில் உள்ள கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதம் மற்றும் கால்சியம் சருமம் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயக்கும் என்றால், அத்துடன் வெல்லம் சேரும்போது, எள்ளின் பயன்கள் இரட்டிப்பாகிறது என்று ஆயுர்வேதம் சொல்கிறது. 

எள்ளுருண்டையை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. இரத்த சோகை (Anemia) இருப்பவர்கல் தொடர்ந்து எள்ளுருண்டையை சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும். 

ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்ற பழமொழியை கேட்டிருக்கலாம்! எளிமையான, விலை குறைவான எள்ளுருண்டையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை எடுத்துக்காட்டும் ஆரோக்கிய மொழி இது...

இளம்வயதினர், பெண்கள், வயதானவர்கள் என வயது பாகுபாடின்றி அனைவரும் எள் உருண்டையை தொடர்ந்து உட்கொள்ளவது உடலுக்கு மிகவும் நல்லது.

ALSO READ | அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் தரும் ஸ்ட்ராபெர்ரி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News