பாக்., அத்துமீறி; எல்லை பாதுகாப்பு படை வீரர் வீர மரணம்

Last Updated : Sep 15, 2017, 08:30 AM IST
பாக்., அத்துமீறி; எல்லை பாதுகாப்பு படை வீரர் வீர மரணம் title=

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பிஎஸ்எப் கான்ஸ்டபிள் பிரிஜேந்திரா பகதூர் சிங் வீர மரணம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் பிஜேந்திர பகதூர் சிங் வீர மரணம் அடைந்தார். 

மேலும் இந்த தாக்குதலில் பொதுமக்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.

Trending News