காவல் நிலையத்தில் மின்சப்ளையை துண்டித்த மின்சார வாரியம்

பஞ்சாப்-ல் கரண்ட் பில் கட்டாததால் 10-14 காவல் நிலையங்களுக்கான மின்சப்ளையை பஞ்சாப் மின்சார வாரியம் துண்டித்தது.

Last Updated : Dec 13, 2019, 09:29 AM IST
காவல் நிலையத்தில் மின்சப்ளையை துண்டித்த மின்சார வாரியம் title=

பஞ்சாப்-ல் கரண்ட் பில் கட்டாததால் 10-14 காவல் நிலையங்களுக்கான மின்சப்ளையை பஞ்சாப் மின்சார வாரியம் துண்டித்தது.

பஞ்சாப் மாநிலத்தில லூதியானாவில் ஒரு சில காவல் நிலையங்கள் மின் கட்டணம் செலுத்தப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், பணம் செலுத்தப்படவில்லை.

 

 

இந்நிலையில் இதையடுத்து பஞ்சாப் மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. லூதியானாவில் உள்ள 10 முதல் 14 காவல் நிலையங்களில் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மின்சாரம் இல்லாததால் காவல் நிலையங்கள் வெளிச்சம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. 

Trending News