COVID-19 பரவல் குறித்து அறிய தொலைபேசி கணக்கெடுப்பு நடத்தும் அரசாங்கம்!

கொரோனா வைரஸ் அறிகுறிகளின் பரவல் மற்றும் விநியோகம் குறித்து குடிமக்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்காக தொலைபேசி கணக்கெடுப்பை நடத்துவதாக அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளதுடன், இந்த பயிற்சியில் மக்கள் நல்ல முறையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டது.

Last Updated : Apr 22, 2020, 07:50 AM IST
COVID-19 பரவல் குறித்து அறிய தொலைபேசி கணக்கெடுப்பு நடத்தும் அரசாங்கம்! title=

கொரோனா வைரஸ் அறிகுறிகளின் பரவல் மற்றும் விநியோகம் குறித்து குடிமக்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்காக தொலைபேசி கணக்கெடுப்பை நடத்துவதாக அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளதுடன், இந்த பயிற்சியில் மக்கள் நல்ல முறையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டது.

இந்த கணக்கெடுப்பிற்காக 1921 என்ற எண்ணிலிருந்து மக்கள் அழைக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் அரசாங்கத்தின் கணக்கெடுப்பு என வேறு எண்ணில் இருந்து போலி அழைப்புகளை மேற்கொள்வோம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

READ | கொரோனாவுக்கு இனவாத வண்ணம் கொடுப்பதை நிறுத்துங்கள் -ரகுராம் ராஜன்...

இந்த கணக்கெடுப்பை இந்திய அரசின் தேசிய தகவல் மையம் (NIC) நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் தெரிவிக்கையில்., "இது ஒரு உண்மையான கணக்கெடுப்பு என்று மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது, மேலும் COVID-19 அறிகுறிகளின் பரவல் மற்றும் விநியோகம் குறித்த சரியான கருத்தை செயல்படுத்த 1921 என்ற எண்ணில் அழைப்பு வரும்போது நல்ல முறையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுபோன்ற கணக்கெடுப்பு என்ற போர்வையில் குறும்புக்காரர்களின் வேறு எந்த அழைப்புகள் அல்லது வேறு எந்த எண்ணிலிருந்தும் அழைப்புகள் வரும்பட்சத்தில் அதுகுறித்து எச்சரிக்கையாக இருங்கள்" என்று கூறியுள்ளது.

READ | கொரோனா ஆய்வகத்தில் இருந்து கசியவில்லை; WHO வலியுறுத்தல்...

இந்த பயிற்சியின் உத்தியோகபூர்வ தன்மை குறித்து ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கும்படி அமைச்சகம் கேட்டுக் கொண்டது, மேலும் வேறு எந்த எண்ணிலிருந்தும் கேலி செய்வோர் அல்லது ப்ராங் கால் பெற்றால் அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

செவ்வாய்க்கிழமை நாட்டில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 18,985-ஆக உயர்ந்தது மற்றும் COVID-19 காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 603-ஆக உயர்ந்தது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் அறிவிக்கப்பட்ட ஒரு PTI எண்ணிக்கை நாடு தழுவிய அளவில் சாதகமான வழக்குகளை 19,867-ஆகக் குறைத்துள்ளது.

Trending News