நிஜமாவா!! MNREGA தொழிலாளர்களின் வருமானம் லாக்டௌனில் இரட்டிப்பானது: Crisil அறிக்கை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம், 2005 (MNREGA) இன் கீழ், நடப்பு வணிக ஆண்டின் முதல் 4 மாதங்களில் ஒரு நபரின் சராசரி மாத வருமானம் சுமார் ரூ .1,000 ஆக உயர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 26, 2020, 06:47 PM IST
  • லாக்டௌன் வேளையில், MNREGA தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக மாறியது.
  • தொழிலாளர்களின் ஊதியம் ஆந்திராவில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
  • ஒரிசாவில் ஊதிய வருமானம் சராசரியாக ரூ .421 லிருந்து ரூ .1,121 ஆக அதிகரித்துள்ளது.
நிஜமாவா!! MNREGA தொழிலாளர்களின் வருமானம் லாக்டௌனில் இரட்டிப்பானது: Crisil அறிக்கை  title=

COVID-19 தொற்றுநோய் காரணமாக MNREGA பணியளர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம், 2005 (MNREGA) இன் கீழ், நடப்பு வணிக ஆண்டின் முதல் 4 மாதங்களில் ஒரு நபரின் சராசரி மாத வருமானம் (Monthly Income) சுமார் ரூ .1,000 ஆக உயர்ந்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் சராசரி மாத வருமானம் ரூ .509 ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூலை மாதங்களில் தொழிலாளர் தினத்தில் செய்யப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகம் என்று மதிப்பீட்டு நிறுவனம் Crisil அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் கிராமங்களில் உள்ள மக்களின் வருமானம் அதிகரித்தது.

COVID-19 தொற்றுநோய் பரவாமல் தடுக்க போடப்பட்ட லாக்டௌனிற்குப் பிறகு, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  இந்த நேரத்தில், MNREGA அவர்களுக்கு வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக மாறியது.

கிரிசில் அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில், முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது மனித நாளில் 46 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் சராசரி ஊதியத்தில் 12 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் தொற்றுநோய் காரணமாக நகரங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கிராமத்திற்குத் திரும்ப கட்டாயப்படுத்தப்பட்டது தான்.

இந்த திட்டத்தின் கீழ், ஒரு வணிக ஆண்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் MNREGA -க்கான பட்ஜெட்டில் ரூ .61,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், MNREGA பட்ஜெட்டை ரூ .40,000 கோடியாக அரசு அதிகரித்தது. இதில், ரூ .11,500 கோடி 2019-20 நிலுவைத் தொகையை தீர்க்க பயன்படுத்தப்பட்டது. இது நடப்பு ஆண்டிற்கு ரூ .90,000 கோடியை மிச்சப்படுத்தியது.

ALSO READ: பயிர்களுக்கு சிறந்த விலை, விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி பரிசு: பிரதமர் மோடி அறிவிப்பு

இந்த நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் திருத்தப்பட்ட நிதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MNREGA இன் பெரும்பாலான பணிகள் ஹரியானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒரிசா மற்றும் குஜராத்தில் உள்ளன. இந்த மாநிலங்களில், 2020-21 முதல் 4 மாதங்களில் வேலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, தொழிலாளர்களின் ஊதியம் ஆந்திராவில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இங்கு ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், இது இரு மடங்கிற்கும் மேலாக, ரூ .1,340 ஆக அதிகரித்துள்ளது.

அதன் பிறகு, ஊதிய வருமானம் சராசரியாக ரூ .421 லிருந்து ரூ .1,121 ஆக அதிகரித்த இடம் ஒரிசா. கர்நாடகாவில் ரூ .593 லிருந்து ரூ .1,088 ஆகவும், ஹரியானாவில் ரூ .600 லிருந்து ரூ .1,075 ஆகவும் வருமானம் அதிகரித்துள்ளது. குஜராத்தில் இது ரூ .507 லிருந்து ரூ .1,031 ஆகவும், உத்தரபிரதேசத்தில் ரூ .576 லிருந்து ரூ .1,004 ஆகவும் அதிகரித்துள்ளது.

ALSO READ: விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.. PMFBY-யில் பயிர் இழப்பு தகவல்களை வழங்குவது முக்கியம்!

Trending News