காதலனுக்காக 2 வயது குழந்தையை கொன்ற கொடூர தாய்! திரைப்பட பாணியில் பிணத்தை மறைத்த கொடுமை..!

Mother Kills Child: சூரத்தில், காதலனுக்காக  தனது 2 வயது குழந்தையை ஒரு பெண் கொலை செய்து அதை திரைப்ப பாணியில் மறைத்து வைத்துள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Jul 4, 2023, 11:04 AM IST
  • சூரத்தை சேர்ந்த ஒரு பெண் தன் 2 வயது குழந்தையை கொலை செய்துள்ளார்.
  • காதலன் குழந்தையுடன் தன்னை ஏற்க மறுத்ததால் இந்த கொடூர செயலை செய்துள்ளார்.
  • த்ரிஷ்யம் படத்தை பார்த்து இந்த கொலைக்கான அதாரங்களை மறைக்க முயற்சி.
காதலனுக்காக 2 வயது குழந்தையை கொன்ற கொடூர தாய்! திரைப்பட பாணியில் பிணத்தை மறைத்த கொடுமை..! title=

குஜராஜ் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் இரண்டு வயது குழந்தையை பெற்ற தாயே கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாயமான குழந்தை..

குஜராத்தில் உள்ள சூரத் நகரில் தங்கி கூலி வேலை பார்ப்பவர், நைனா மாண்டவி. இவர், சில நாட்களுக்கு முன்னர் தனது இரண்டரை வயது ஆண் குழந்தையை காணவில்லை என சூரத் நகரில் உள்ள டிண்டோலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த குழந்தையின் பெயர், வீர் மாண்டவி.  இதையடுத்து, போலீஸார் குழந்தையை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தை தங்கியிருந்த கட்டுமான பணி நடக்கும் இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அதில், குழந்தை அந்த இடத்தை விட்டு போனதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மோப்ப நாய்களை வைத்தும் அந்த கட்டுமான தொழில் நடத்தும் இடத்தில் தேடியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு குழந்தை அந்த இடத்தில் இருந்து உயிருடன் சென்றதற்கான எந்த அடையாளமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, குழந்தையின் தாயிடம் போலீஸார் தீவிர விசாரனை நடத்தியுள்ளனர். அதில், பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. 

மேலும் படிக்க | திருமண வயதை 16ஆக குறைக்க பரிந்துரை!

காதலன் மீது பழி..

குழந்தையின் தாயான நைனா மாண்டவியிடம் போலீஸார் தீவிர விசாரனை நடத்தியதால் பயந்து போன அவர் தனது காதலன் குறித்த தகவல்களை காவல் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் தனது காதலர் வசித்து வருவதாகவும் அவர்தான் தன் குழந்தையை கடத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் ஜார்காண்டில் உள்ள காதலரை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அவர்களால் அந்த நபரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், போலீஸாரிடம் பேசுகையில் அவர் சூரத்திற்கு வரவேயில்லை என்பதை தீர்க்கமாக தெரிவித்துள்ளார். 

குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்..

காணாமல் போன குழந்தையின் தாய் கூறிய பதிலை வைத்து காதலருக்கு போன் செய்த போலீஸாருக்கு அதற்கு மேல் எந்த ஆதரமும் கிடைக்காமல் போனது. அவர்களுக்கு கிடைத்த தடயங்களின் படி, குழந்தை கட்டுமான தொழில் நடக்கும் கட்டடத்தை விட்டு வெளியில் போகவில்லை என்பதுதான். குழந்தை கடத்தப்பட்டதற்கான ஆதாரங்களும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. இந்த தகவலை வைத்து, குழந்தையின் தாயிடன் கிடுக்குப்பிடி விசாரனை நடத்தினர். இறுதியில், அந்த தாயே தன் குழந்தையை கொன்றதாக ஒப்புக்கொண்டார். குழந்தையின் உடலை எங்கு மறைத்து வைத்துள்ளார் என போலீஸார் விசாரணை நடத்தியபோது தவறான இடங்களை காண்பித்து அவர்களை திசைதிருப்ப முயற்சி செய்திருக்கிறார், அந்த பெண். 

குழந்தையை புதைத்த இடம்..

கொலை செய்த பெண் முதலில் குழந்தையின் பிணத்தை கட்டுமான தொழில் நடக்கும் ஒரு குழிக்குள் புதைத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், அங்கு போலீஸார் தோண்டியபோது அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. பின்னர், ஒரு குளத்தில் குழந்தையின் பிணத்தை மறைத்து வைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளர். ஆனால் அங்கும் குழந்தையின் பிணம் கிடைக்கவில்லை. பொறுமை இழந்த போலீஸார், அப்பெண்ணிடத்தில் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்துள்ளனர். இறுதியில், அந்த பெண் குழந்தையின் பிணத்தை கட்டுமான பணிகள் நடைப்பெற்று வரும் கட்டடத்தில் கழிவறைக்காக வெட்டப்பட்ட குழியில் பிணத்தை புதைத்து வைத்ததை ஒப்புக்கொண்டார். குழந்தையின் சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டது. 

காதலுக்காக கொலை..!

கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். ஜார்க்கண்டில் உள்ள தனது காதலர், குழந்தையுடன் வந்தால் தன்னை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என கூறிவிட்டதால் குழந்தையை கொன்றதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். காதலர் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக பெற்ற குழந்தையை தாயே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

த்ரிஷ்யம் பட பாணியில் பிணம் மறைப்பு...

மலையாளத்தில் மோகன்லால், மீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த த்ரிஷயம் படம் இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இப்படத்தில் பிணம் கிடைக்காததால் கடைசியில் குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலை ஏற்படும். இதைப்பார்த்துதான் தனது குழந்தையின் பிணத்தை தான் மறைத்து வைத்ததாக அப்பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார். போலீஸார் இந்த கொலையை கண்டுபிடித்தாலும் பிணம் கிடைத்தால்தான் தன்னை கைது செய்ய முடியும் என கணக்கு போட்ட இந்த பெண், அதன் பிறகு ஜார்கண்டில் உள்ள காதலனிடம் சென்று விடலாம் என முடிவெடுத்துள்ளார். கடைசியில் இந்த எல்லா உண்மைகளும் விசாரணையில் வெளிவந்துள்ளது.  

மேலும் படிக்க | அரிசியை பணமாய் கொடுக்கும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா! இலவச அரிசி திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News