தவறாக நடந்து கொண்டதாக ஜமாஅத் உறுப்பினர்களுக்கு எதிராக என்.எஸ்.ஏ. சட்டம்: யோகி ஆதித்யநாத்

தப்லீகி உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்ட காசியாபாத் மருத்துவமனைகளில் உள்ள கோவிட் -19 வார்டுகளில் பணிபுரியும் அனைத்து பெண் சுகாதார ஊழியர்கள் மற்றும் பெண்கள் போலீஸ்காரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கிருந்து அவர்களை நீக்குமாறு ஆதித்யநாத் அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 3, 2020, 03:52 PM IST
தவறாக நடந்து கொண்டதாக ஜமாஅத் உறுப்பினர்களுக்கு எதிராக என்.எஸ்.ஏ. சட்டம்: யோகி ஆதித்யநாத் title=

புது டெல்லி: சில தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் காசியாபாத் மருத்துவமனையில் செவிலியர்களுடன் தவறாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து, உத்தரபிரதேச அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ய வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்தூர் போன்ற சம்பவத்தை மீண்டும் மாநிலத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.

நகர மருத்துவமனைகளில் சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜமாஅத்தின் உறுப்பினர்கள் சிலர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் தவறாக நடந்து கொண்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இன்னும் சிலர் நர்சிங் ஊழியர்களுடன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

காஜியாபாத் அதிகாரிகள் இதுவரை ஜமாஅத்தில் இருந்து 156 பேரை தனிமைப்படுத்தியு உள்ளனர். மார்ச் மாதத்தில் டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள மத சபையில் கலந்து கொண்ட பின்னர் அவர்கள் தொடர்பு கொண்ட பலரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு' வருகின்றனர்.

தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) என் கே குப்தா கூறுகையில், சுந்தர் டீப் கோலேஜில் 90 பேரும், முராத் நகரில் சூர்யா மருத்துவமனையில் 56 பேரும், எம்.எம்.ஜி அரசு மருத்துவமனை மற்றும் சஞ்சய் நகரில் உள்ள ஒருங்கிணைந்த மருத்துவமனையில் தலா ஐந்து பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தப்லீகி உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்ட காசியாபாத் மருத்துவமனைகளில் உள்ள கோவிட் -19 வார்டுகளில் பணிபுரியும் அனைத்து பெண் சுகாதார ஊழியர்கள் மற்றும் பெண்கள் போலீஸ்காரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கிருந்து அவர்களை நீக்குமாறு ஆதித்யநாத் அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஜமாஅத் உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்ட வார்டுகளில் ஆண் சுகாதார ஊழியர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் அரசாங்க அதிகாரிகளுடன் முறைகேடாக நடந்து கொண்ட இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இண்டூரைச் சேர்ந்த இரண்டு பெண் மருத்துவர்கள் உட்பட கண்காணிப்பு அதிகாரிகள் கற்களால் தாக்கப்பட்டபோது காயமடைந்தனர். இந்தூர் சம்பவத்திற்காக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு என்எஸ்ஏ கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பீகாரின் முங்கரில், போலீசார் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மாதிரிகள் சேகரிக்க சென்ற போது தாக்கப்பட்டனர். அதேபோல மகாராஷ்டிராவில், சோலாப்பூரில் ஒருவர் தாக்கப்பட்டார். ஏனெனில் அவர் தில்லிஹி ஜமாஅத் நிகழ்சியில் கலந்துக்கொண்ட உறுப்பினர்கள் தங்கிருந்த இடத்தை கிராம அதிகாரிகளுக்கு தெரிவித்ததால் தாக்கப்பாட்டார்.

Trending News