7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, விரைவில் சம்பளம் உயரும்

DA Hike Latest News: நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதன்படி இனி ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப் போகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 6, 2023, 08:36 AM IST
  • 7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு.
  • DA எப்போதுலாம் அதிகரிக்கும்.
  • அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, விரைவில் சம்பளம் உயரும் title=

7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு: நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மத்திய ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அந்த வகையில் நீங்களும் அகவிலைப்படி உயர்வுக்காகும் என்று காத்தி இருந்தால், இனி ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப் போகிறது. தற்போது ஊழியர்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாதம் முதல், ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். இதனுடன், ஊழியர்களின் சம்பளம் ரூ.90,000 உயர்த்தப்பட உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, டிசம்பர் 2022க்கான CPI-IW ஜனவரி 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ் தொழில்துறை மையங்களில் இருந்து எடுக்கப்பட்ட CPI-IW புள்ளிவிவரங்களிலிருந்து DA கணக்கிடப்படுகிறது. அதன்படி அகவிலைப்படி உயர்வு 4.23 சதவீதமாக உள்ளது.

மேலும் படிக்க | ஆதார் கார்டை வைத்து 10 நொடியில் வங்கி கணக்கை சரிபார்க்கலாம்... எப்படி தெரியுமா?

ஹோலிக்குப் பிறகு கூடுதல் சம்பளம் கணக்கில் வரும்
அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, டிஏ அதிகரிப்பின் பலன் ஜனவரி 1 முதல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும். ஊடக அறிக்கையின்படி, அரசாங்கம் ஹோலிக்கு முன்னதாக ஊழியர்களின் டிஏவை அதிகரிக்கலாம், அதாவது அடுத்த மாதம் முதல் ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்கப்படலாம்.

90,000 சம்பளம் அதிகரிக்கலாம்
7வது ஊதியக் குழுவில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, ஊழியர்களின் டிஏ அதிகரிப்புக்குப் பிறகு, ஒரு ஊழியரின் சம்பளம் ரூ.30,000 என்றால், அவரது மொத்த சம்பளம் சுமார் ரூ.10,800 வரை உயரலாம். மறுபுறம், செயலாளர் மட்டத்தைப் பற்றி பேசுகையில், ஊழியர்களின் ஆண்டு சம்பளம் ரூ.90,000 அல்லது அதற்கு மேல் அதிகரிக்கலாம்.

DA எப்போதுலாம் அதிகரிக்கும்?
ஆறு மாத மதிப்பாய்வுகளுக்குப் பிறகு ACIPI எண்களின் அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை DA அதிகரிக்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு ஹோலிக்கு முன் அல்லது ஹோலிக்குப் பிறகு அதிகரிக்கலாம். ஆண்டின் தொடக்கத்தில், அரசாங்கம் DAவை 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தியது, இதன் காரணமாக அகவிலைப்படி 38 சதவீதமாக அதிகரித்தது. மூன்று சதவீத சம்பள உயர்வு பெற்றால், அகவிலைப்படி 41 சதவீதம் அல்லது 42 சதவீதமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வங்கியில் கடன் வாங்க திட்டமா? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News