இவர்கள்தான் தாய் லட்சுமியின் செல்லப்பிள்ளைகள்: வாழ்நாள் முழுவதும் பணமழையில் நனைவார்கள்

Astrology: வாழ்நாள் முழுவதும் பண வரவுக்கான வரத்துடன், லட்சுமி அன்னையின் செல்லப்பிள்ளைகளாக இருக்கும் ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 5, 2022, 06:22 PM IST
  • மேஷ ராசிக்காரர்கள் வாழ்வில் செல்வத்திற்கும் செழிப்பிற்கும் பஞ்சமிருக்காது.
  • ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு எப்போதும் கிடைக்கும்.
இவர்கள்தான் தாய் லட்சுமியின் செல்லப்பிள்ளைகள்: வாழ்நாள் முழுவதும் பணமழையில் நனைவார்கள் title=

ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களின் ஆளுமையும் வித்தியாசமாக இருக்கும். சிலர் மிகவும் புத்திசாலிகளாகவும், சிலர் கடின உழைப்பாளிகளாகவும், சிலர் வள்ளல்களாகவும், சிலர் சிக்கன பேர்வழிகளாகவும் இருப்பார்கள். அந்த வகையில், சிலர் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். 

இவர்கள் அதிகம் உழைக்காமலேயே லட்சுமி தேவியின் அருளை பெற்று விடுகிறார்கள். வாழ்நாள் முழுவதும் பண வரவுக்கான வரத்துடன், லட்சுமி அன்னையின் செல்லப்பிள்ளைகளாக இருக்கும் ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவர்களுக்கு எந்த வித செல்வச் செழிப்புக்கும் எப்போதும் குறை இருக்காது. 

மேஷம்:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, மேஷ ராசிக்காரர்கள் தாய் மகாலக்ஷ்மியின் சிறப்பு ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். நிதி விஷயங்களிலும், இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை விட முன்னணியில் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சவால்கள் வந்தாலும், அவற்றை உறுதியாக எதிர்கொண்டு முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் வாழ்வில் செல்வத்திற்கும் செழிப்பிற்கும் பஞ்சமிருக்காது.

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். அதிர்ஷ்டமும் அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இவர்களது கருணை மற்றும் அன்பு காரணமாக, இவர்கள் அனைவரது இதயத்தையும் எளிதில் வென்றுவிடுவார்கள். 

மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசிகளை பாடாய் படுத்தவுள்ளார் சனி பகவான் 

ரிஷப ராசிக்காரகள் பேசுவதிலும் வல்லவர்கள். இவர்களது பேச்சுத்திற்னால், அனைவரையும் தங்களை நோக்கி ஈர்த்து விடுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் மீது தாய் லக்ஷ்மி எப்போதும் தனது சிறப்பு அருளை பொழிகிறார். இதன் காரணமாக இவர்களது வாழ்க்கையில் ஒருபோதும் பணப் பற்றாக்குறையே இருக்காது. 

கடகம்:

கடக ராசிக்காரர்கள் மீதும் அன்னை லக்ஷ்மியின் அருளும் கருணைப் பார்வையும் எப்போதும் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு எப்போதும் கிடைக்கும். 

கடக ராசிக்காரர்கள் பெரும்பாலும் கடின உழைப்பாளிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். இவர்களது வாழ்வில் செல்வத்துக்கும் பெருமைக்கும் எப்போயும் பஞ்சமிருக்காது. இவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டாகும். தங்களிடம் இருக்கும் செல்வத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கும் தயாள குணம் கொண்டவர்கள் இவர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றிற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astrology: சுக்கிரன் பெயர்ச்சியினால் குபேரன் ஆகப் போகும் ‘3’ ராசிக்காரர்கள்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News