புதன் கிரகத்தால் இன்று முதல் பெரிய மாற்றம்: 4 ராசிக்காரர்கள் மீது நேரடி தாக்கம்

Budh Transit: புதனின் மாற்றத்தால் 4 ராசிகளில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். இந்த விளைவுகள் சிலருக்கு சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 4, 2022, 05:52 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் நேரடி சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுவரை தடைப்பட்ட பணிகள் இப்போது நடக்கும்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த சஞ்சாரம் சாதகமற்றதாக இருக்கும்.
புதன் கிரகத்தால் இன்று முதல் பெரிய மாற்றம்: 4 ராசிக்காரர்கள் மீது நேரடி தாக்கம் title=

இன்று அதாவது பிப்ரவரி 4ம் தேதி முதல் புத்திக்கூர்மை, வியாபாரம் ஆகியவற்றின் அதிபதியான புதன் கிரகத்தின் இயக்கம் தொடங்கியுள்ளது. இதன் நேரடி தாக்கம் மக்களின் பேச்சு, தர்க்கம், அறிவுத்திறன் மற்றும் பணத்தின் மீது இருக்கும். 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதனின் மாற்றத்தால் 4 ராசிகளில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். இந்த விளைவுகள் சிலருக்கு சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். புதனின் நேரடி சஞ்சாரம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும், 1 ராசிக்கு இது அசுப பலன்களைத் தரப் போகிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி காலை 09:16 மணி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் (Zodiac Signs) வாழ்க்கையில் புதன் என்ன பெரிய மாற்றங்களை கொண்டு வருகிறார் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் 

மேஷம் (Aries): மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் நேரடி சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். அவர்களுடைய தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வெற்றிக்கான பாதை எந்த தடையும் இன்றி தெளிவாக உள்ளது. புதிய சலுகைகள் கிடைக்கும், படைப்புகள் பாராட்டப்படும், வருமானம் அதிகரிக்கும். மொத்தமாக, இது மிகவும் நல்ல நேரம். 'ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தை தினமும் 41 முறை உச்சரிப்பது வெற்றியை இரட்டிப்பாக்கும்.

ரிஷபம் (Taurus): ரிஷப (Taurus) ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இதுவரை தடைப்பட்ட பணிகள் இப்போது நடக்கும். உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். குறிப்பாக தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள். வியாபாரம் வளரும். வெளிநாட்டில் இருந்து லாபம் உண்டாகும். 'ஓம் ப்ராம் பிரிம் ப்ரௌன் சஹ புதாய நமஹ' என்ற மந்திரத்தை தினமும் 32 முறை உச்சரித்து வந்தால் லாபம் அதிகரிக்கும். 

ALSO READ | வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் இந்த 3 ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவரா?

மகரம் (Capricorn): புதன் இதுவரை இந்த ராசியில் தலைகீழ் இயக்கத்தைக் கொண்டிருந்தார். இப்போது இவரது இயக்கம் இந்த ராசியில் நேரடியாக இருப்பதால், புதனின் நேரடி சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். தொழிலில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். வெற்றிகள் வர ஆரம்பிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். வெளியூர் பயணம் நல்ல செய்திகளை கொண்டு வரும். நாராயணீயம் பாராயணம் செய்வது நன்மை தரும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பாதகமான சூழல் ஏற்படலாம் 

தனுசு(Sagittarius): தனுசு ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த சஞ்சாரம் சாதகமற்றதாக இருக்கும். அவர்கள் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். அதிக செலவுகள் வரும். பணம் எங்காவது சிக்கிக்கொள்ளும். ஆகையால், தனுசு (Sagittarius) ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரம் தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்காது. உடல் ஆரோக்கியத்தில், குறிப்பாக கண்களில் அதிக கவனம் தேவை. தினமும் காலையில் 'ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது நன்மை தரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | ராகுவின் இட மாற்றத்தால் 5 ராசிக்காரர்களுக்கு 'ஹை அலர்ட்' காலம்: உங்க ராசி என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News