PM Kisan நிதியுதவி; 11வது தவணை குறித்த முக்கிய அப்டேட் வெளியீடு

PM Kisan 11th Installment: PM Kisan Samman Nidhi Yojana பயனாளிகள் 11வது தவணைக்காக காத்திருக்கின்றனர். e-KYC இல்லாமல் இந்தத் தவணையின் பணம் உங்கள் கணக்கிற்கு மாற்றப்படாது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 20, 2022, 08:00 AM IST
  • பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா
  • 11வது தவணைக்கு இ-கேஒய்சி கட்டாயம்
  • இ-கேஒய்சி எவ்வாறு செய்வது
PM Kisan நிதியுதவி; 11வது தவணை குறித்த முக்கிய அப்டேட் வெளியீடு title=

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பிஎம் கிசான்) பயனாளிகள் 11வது தவணைக்காக காத்திருக்கின்றனர். இத்திட்டத்தில் 12 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். 11வது தவணை தொகை ஏப்ரல் முதல் ஜூலை வரை வெளியிடப்பட உள்ளது. 

11வது தவணைக்கு இ-கேஒய்சி செய்ய வேண்டியது கட்டாயம்
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்தத் தொகை 2000-2000 என்ற மூன்று தவணைகளில் அனுப்பப்படுகிறது. ஐந்து மாநிலங்களுக்கு தேர்தலுக்கு முன் 10வது தவணையை அரசு அனுப்பியிருந்தது. ஆனால் 11வது தவணைக்கு இ-கேஒய்சி செய்ய வேண்டியது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இ-கேஒய்சி செய்வதற்கான கடைசி தேதி மே 31 ஆகும்.

மேலும் படிக்க | SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள் 

மத்திய அரசின் இந்த திட்டத்தில் மாநிலங்களின் ஒப்புதலும் அவசியமாகும். சில மாநில அரசுகள் 11வது தவணைக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. போர்ட்டலில் உள்ள நிலையைச் சரிபார்த்தபோது, ​​மாநிலத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டால், உங்கள் தவணைக்கான ஒப்புதல் மாநில அரசிடமிருந்து வரவில்லை என்பது அற்தமாகும்.

இந்தநிலையில், விவசாய பயனாளிகள் இ-கேஒய்சி செயல்முறையை மார்ச் 31, 2022 க்குள் முடிக்காவிட்டால், அவர்களால் 11வது தவணையைப் பெற முடியாது. எனவே விவசாயிகள் விரைவாக இ-கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும்.

இ-கேஒய்சி எவ்வாறு செய்வது
* முதலில், விவசாயிகள் பிஎம்-கிசான் இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

* பின்னர் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘இ-கேஒய்சி’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்

* ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் பயனாளி விவசாயியின் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்ய வேண்டும்.

* பின்னர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும் இடத்தில், பொபைல் எண்ணை உள்ளிட்டவும். அதை உள்ளிட்ட பிறகு ‘ஓடிபி பெறவும்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்

* இப்போது, ​ஓடிபி ஐ உள்ளிட வேண்டும். இப்போது பிஎம்-கிசான் இ-கேஒய்சி சமர்ப்பிக்கப்பட்டு விடும்.

இந்த செயல்முறை தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News